Thursday, October 15, 2015

கந்தனைக் காணவேண்டும்



கந்தனைக் காணவேண்டும் – திருமுருகக்
கந்தனைக் காண வேண்டும்                                    (கந்தனை)

விந்தை அணிகலனாய் வந்த சிவமைந்தன்
பந்தம் அறுத்தவரின், பந்தன், திருக்குமரன்                      (கந்தனை)

சிந்தை எழுந்தவனை சேவித்து நின்றிட
எந்தன் இருவிழியில் இன்பநீர் பொங்கிட
சந்தம் இசைத்துஎன் நாவும் துதித்திட
வந்தனை செய்திந்த வேளையில், கண்களில்                     (கந்தனை)