கவிதைகள்



(கவிஞர் மு.பாவாணன் என்பது என் தந்தையின் புனைப்பெயர். இந்த வலைப்பூவின் முதல் பதிப்பாக அவர் எழுதிய கவிதையை  பதித்து, அவரின் பாதங்களைப் பணிந்து தொடங்குகிறேன்).




Sunday, June 28, 2015


கயிலை மலை வாழும் காருண்யனே

கயிலை மலை வாழும் காருண்யனே - யாவும்
கடந்ததொரு நிலையில் இருப்பவனே - ஈசா         (கயிலை)



பயிலும் ஊழித் தாண்டவம் ஆடும் உன்
பாதங்களில் வீழ்ந்து பணிந்திட அருள்வாய்          (கயிலை)


ஐம்புலன்கள் என்னும் யானைகள் அடங்க
அலைகின்ற உள்ளம் ஒர்வழி நிலைக்க
மெய்வடி வானஉன் பெயர்சொல்லித் துதிக்க
மேலான பேரின்பம் நான்காண அருள்வாய்          (கயிலை)


****************************


கவிஞர். மு. பாவாணன்.





No comments:

Post a Comment