பாகம் 1
பாகம் 2
"கண்ணன் இல்லையா?"
"வெளியே போயிருக்கான். என்ன விஷயம்?"
"கடையில ஒரு ட்ரிப்பர் போயிடுச்சி. அதான், அந்த ட்ரிப்பர மேல தூக்கினாலும் கீழேயே இறங்கிடுது. அதுக்குதான் கண்ணன தேடி வந்தேன்,"
"கொஞ்ச நேரமாகுமே...வேற யாரையாவது அனுப்பட்டுமா?"
இல்ல. கண்ணன் வந்தவுடனே அனுப்ப்புங்க. ஏன்னா, அவனுக்குதான் நம்ம கடை வையரிங்க் நல்லா தெரியும்."
"சரி. அவன் வந்தவுடனே அனுப்பி வெக்குறேன்."
அந்த ஆள் சென்றவுடன் முதலாளி புன்னகைத்தார். எல்லோருக்கும் கண்ணன் தான் வேண்டும். அவன் கை வைத்தால் மறுமுறை கோளாறு வராது என்னும் அளவுக்கு அவன் மேல் நம்பிக்கை.
அது ஒரு சிறிதுமில்லாத, பெரிதுமில்லாத, நடுத்தரமான எலக்ட்ரிகல் கடை. விற்பனை மட்டுமில்லாமல் மின்சார பழுது பார்க்கும் ஆட்களையும் வேலைக்கு வைத்திருந்தார் அந்தக் கடை முதலாளி. ஆனால் கண்ணன் வந்த பின்பு வாடிக்கையாளர் எல்லோரின் மனதிலும் நல்ல பெயரை வாங்கிவிட்டான். அவனின் பொறுப்பான வேலையும், என்ன பழுது என்பதை எடுத்துரைக்கும் பணிவும் அவனுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது.
சைக்கிளை மிதித்துக்கொண்டு கண்ணன் வந்தான்.
"கண்ணா, நம்ம தெரு முனை துணிக்கடை இருக்குல்ல. அதுல ட்ரிப்பர் ஸ்விட்ச் போயிடுச்சாம். புதுசு ஒண்ணு எடுத்துக்கிட்டு போய் அத மாட்டி விட்டுடு."
"சரி முதலாளி."
"இரு. சாப்பிட்டியா?"
"இல்லைங்க"
"அப்போ சாப்பிட்டிட்டு போ. ஒண்ணும் அவசரமில்ல."
"பரவாயில்ல முதலாளி. சின்ன வேலைதானே. சட்டுன்னு முடிச்சிட்டு வந்துடுறேன்."
அவன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு பெருமூச்சை விட்டு, "பாவம்" என்று மட்டும் சொன்னார்.
கேசவனின் வாழ்க்கையில் மாற்றங்கள் அதிகம் நடந்துவிட்டன. தையற்கடையில் சேர்ந்து, வேலை நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவன், தனது கலகலப்பான பேச்சினால் வாடிக்கையாளர்களை கவர்ந்து விட்டான். பணம் சேர்த்துவிட்டு ஒரு சிறிய தனிக்கடையை திறந்துவிட்டான். அவனுடன் இன்னுமொரு தையற்காரர், ஒரு உதவியாளன் என்று சின்ன ஸ்தாபனத்தை நிறுவியவன், அதற்கு மேல் தாமதிக்காமல் திருமணமும் செய்துவிட்டான். அவனது திறமையால், அவன் படிப்படியாக முன்னேறுவிடுவான் என்பது உறுதியாகத் தெரிந்தது.
கண்ணன் எப்போதாவது கேசவனைப் பார்ப்பதோடு சரி. இருவருக்கும் வேலை அதிகம் என்பதால் அடிக்கடி சந்திப்பதில்லை. அதே சமயத்தில், கேசவனின் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக இருந்தவன் கண்ணனே. இருவருக்குமிடையே என்றும் தேயாத நட்பு இருந்தது. கால ஓட்டத்தில் கேசவனுக்கு இரு குழந்தைகளும் பிறந்துவிட்டனர்.
கண்ணன் தன்னைப் போன்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்த இரு பிரம்மச்சாரி வாலிபர்களுடன் சேர்ந்து ஓர் அறையை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தான். வீண்செலவுகள் எதுவும் செய்வதில்லை என்றாலும், பணத்தை அதிகம் சம்பாதிப்பதை அவன் விரும்பவில்லை. வேலைக்கேற்ற ஊதியம் என்பதே அவன் விருப்பம்.
வேலையை முடித்துவிட்டு, நம்முடைய மூச்சு அடைத்துப் போகுமளவிற்கு ஊதியம் கேட்பவர்களை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டுவிட்டாலோ, 'நான் உன் உயிரை காப்பாற்றியிருக்கிறேன்' என்பதில் தொடங்கி, இந்திய அரசியலையும், உலக அரசியலையும் அலசி, கடைசியில் அவர்களின் கடை முதலாளியைத் திட்டுவதில் முடிப்பார்கள். நம் நிலையோ பரிதாபம். வேலைக்கான பணம் அதிகம் என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நமக்கு உடன்பாடு இருக்குமென்பதால் வேறு வழியின்றி கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவோம்.
கண்ணன் எந்த சமயத்திலும் அவ்வாறு செய்ததில்லை. அதனால் அவன் கேட்கும் பணத்தை எவ்வித எதிர் கேள்வியுமில்லாமல் கொடுக்கலாம். இப்படி இருப்பவனிடம் எப்படி பணம் சேரும்?
ஒரு ஞாயிற்றுக்கிழமை கேசவன் கண்ணனைப் பார்க்க வந்தான்.
"கண்ணா, எப்படிடா இருக்க?
"வாடா வா. நல்லா இருக்கேன். என் தங்கச்சி நல்லாயிருக்கா?"
"நல்லாயிருக்கா. ஏண்டா, ஒரு செல்ஃபோன் வாங்க மாட்டியா?"
"இருக்குடா. ஆனா, அது முதலாளி கொடுத்திருக்காரு. வேல விஷயமா மட்டும்தான் பேசணும்."
"உன்ன திருத்தவே முடியாது. விடு. இப்போ நானொரு முக்கியமான விஷயமா வந்திருக்கேன்."
"என்ன, சொல்லுடா?"
"நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?"
கண்ணன் வாய் விட்டு சிரித்தான். "கேசவா, நீயே இப்படி பேசலாமா? இது ஒண்ணுதான் எனக்கு குறைச்சல்!"
"கண்ணா, இப்படி சொல்லலாமா? நமக்குன்னு யாரு இருக்கா? உன்ன கவனிச்சுக்க ஒருத்தர் வேண்டாமா? நான் உனக்கு கெடுதலா சொல்வேன்?"
"அப்படி இல்லடா. கல்யாணம் செஞ்சுகிட்டா ரெண்டு பேருக்கு சம்பாதிக்கணும். மட்டுமில்லாம, என் கிட்ட இருக்குறது ஏழ்மையும், தனிமையும்தான். இத பங்கு போட்டுக்க யாரு வருவாங்க?"
"சம்பாதிக்கிறது என்னடா பெரிய விஷயம். நாம என்ன பணத்தோடவா வளர்ந்தோம்! இதோ பாரு. என் வீட்டுக்காரி அவளுக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு பத்தி நேத்துதான் சொன்னா. நல்ல பொண்ணாம். கிட்டத்தட்ட நம்மள மாதிரிதான். அம்மா இல்ல. அப்பாவும் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி போயி சேர்ந்துட்டாரு. பனிரெண்டாவது வர படிச்சிருக்காம். பணம் காசு எல்லாம் ஒண்ணும் கிடையாது. ஆனா தங்கமான மனசு. ம்... அப்படி இருக்குறவங்களுக்குதானே இப்படியெல்லாம் நடக்கும். சரி. உனக்கேத்த நல்ல பொண்ணு. நான் உனக்கு தப்பா கொண்டுவருவேனா?"
கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.
"கல்யாணம் பண்ணிக்கிட்டா தனி வீடு பாக்கணும். வாடகை செலவு அதிகமாகும். ரெண்டு வயிறுக்கு சம்பாதிக்கணும். குழந்த குட்டின்னு வந்துட்டா, செலவு இன்னமும் அதிகமாகும்." (குழந்தை என்ற வார்த்தையை சொல்லும்போது கண்ணனின் இதயத்தில் ஒரு சிறு நடுக்கம் உன்டாயிற்று. அது இன்பமா அல்லது நடுக்கமா என்பது புரியவில்லை).
"அதெல்லாம் பார்த்துக்கலாம். வயசு போயிடுச்சுன்னா திரும்ப வருமா? இந்தப் பொண்ணும் உனக்கு ஏத்த மாதிரி இருக்கு. பொண்ண வந்து பாரு. நல்லதாகவே நடக்கும்."
அந்தப் பேச்சு வரும்வரை கண்ணன் திருமணத்தைப் பற்றி நினைத்ததேயில்லை. கேசவனைத் தவிர, இந்த உலகில் யார் இதை சொல்லியிருந்தாலும் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் 'இல்லை' என்று கண்ணன் சொல்லியிருப்பான்.
"அடுத்த ஞாயிற்றுக்கிழமை போய் பார்த்துடலாமா?"
கண்ணன் சரியென்று தலையாட்டினான்.
ஞாயிறும் வந்தது. கேசவன் இரு சக்கரவாகனத்தில் வந்து கண்ணனை அழைத்துச் சென்றான். அவன் மனைவி முன்னமே பேருந்தில் சென்று விட்டாள். நாத்தனார் பொறுப்பல்லவா! பெண்ணுடன் பேசிப்பழகி, உளவுத்துறை போல், பெண்களுக்கே உரித்தான மனதில் இருப்பதை முகத்தை வைத்தே தெரிந்து கொள்ளும் ஆற்றலால், சில இரகசியங்களை தெரிந்து கொள்ள.
கண்ணனும் வந்து பெண்ணை பார்த்தான். இரகசியங்கள் எதுவும் தேவைப்படவில்லை. அந்தப் பெண் ஏழ்மையிலும், சோகத்திலும் அடிபட்டு, புதுவித தேவதையாக கண்ணனின் கண்களுக்குத் தெரிந்தாள்.
அப்புறமென்ன! ஒரே ஒரு அறையைக் கொண்ட சிறு குடித்தனத்தை கண்ணன் தேடி பிடித்துவிட்டான். கண்ணன் முதலாளி முன்னிலையில், கேசவனும், அவன் மனைவியும் உறவு சான்றாக நிற்க, கோயிலில் கண்ணன் கல்யாணியின் கழுத்தில் மாலையிட்டான். அருகிலிருந்த உணவகத்தில், அனைவருக்கும் கண்ணனின் முதலாளி மதிய உணவு விருந்தளித்தார். ஒரு ஏழையின் திருமணம் இவ்வாறு இனிதே நடந்து முடிந்தது.
குடும்பம் தொடங்குவதற்குத் தேவையான பொருட்களை, கேசவன் தங்கையின் சீதனமாக கொடுத்து விட்டான்.
மனைவி வந்தபின் வாழ்க்கை மாறிப் போனது. கல்யாணி கணவன் மீது வைத்திருந்த அளவில்லாத அன்பினால் இருவரது வாழ்விலும் இன்பத்தின் சாயல் படறத் தொடங்கியது. இருவருமே துன்பத்தை மட்டுமே தாங்கியவர்கள் என்பதால் இன்பத்தின் உண்மையான சுவை நம்மை விட அவர்களால் நன்கு உணரமுடியும்.
முதலாளி கண்ணனின் சம்பளத்தை சற்று உயர்த்திக் கொடுத்தாரென்றாலும், கண்ணன் முன்பைவிட அதிகமாக உழைக்க ஆரம்பித்தான். அவனுடைய அடிப்படை குணத்தில் எந்த மாற்றமும் இல்லையென்பதால், ஏமாற்றிப் பிழைப்பது அறியாமல், அதிகமாக உழைத்து பணம் சேர்க்க ஆரம்பித்தான்.
ஒரு நாள் கண்ணன் அப்பாவாகப் போகிறான் என்பதை கல்யாணி அவனிடம் கூச்சத்துடன் சொன்னாள். இந்த செய்தி கண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததென்றாலும், கல்யாணியிடம்,
"ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கும்னு நான் கனவு கூட கண்டதில்ல."
மனைவியின் தலை குனிந்து வெட்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தவன், "அதே சமயம்...கொஞ்சம் கவலையாகவும் இருக்கு."
"எதுக்குங்க கவலப்படுறீங்க?"
"குழந்தைன்னா...அத நல்லா பாத்துக்கணும். படிக்க வைக்கணும்...நான் பட்ட கஷ்டமில்லாம அந்தக் குழந்தைய வளர்க்கணும்..."
"கவலப்படாதீங்க. நாம வாழ்க்கையில் பார்த்த, அனுபவித்த துன்பங்களை நம்ம குழந்தைகளுக்கு வராம செய்றதுதானே அப்பா அம்மா கடமை. நீங்க எங்கள நல்லா பார்த்துப்பீங்க."
இந்த அன்பு வார்த்தைகள் கண்ணனுக்கு மன அமைதியைத் தந்தது.
துன்பமறிந்த மனைவி துணையிருக்கையில் ஒரு மனிதன் என்னதான் செய்ய இயலாது!
தன்னாலியன்றவரை மனைவிக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தான். அந்த தெருவில் ஒரு வயதான அம்மா இருந்தார்கள். கண்ணன் வேலைக்குச் சென்ற பின் அவர்கள் வந்து கல்யாணியுடன் இருந்தார்கள். ஏழைக்கு ஏழைதானே துணையாக இருக்க முடியும்!
கண்ணன் ஒரு நாள் கடைக்கு சென்றபோது முதலாளி அவர்கள்,
"கண்ணா, வா..வா.. மூணாவது தெருவிலிருக்கிற மளிகைக் கடைக்காரர் வந்திருந்தார். அவர் ஒரு மாசம் ஊருக்கு போறாராம். அந்த சமயத்துல, அவர் வீட்டுக்குள்ள இருக்குற மொத்த வையரிங்க மாத்தணுமாம்! வீடு கட்டி நாப்பது வருஷமாச்சாம். பொருள், கூலி எல்லாம் சேர்த்து ரெண்டு லட்சம் ஆகும்னு சொல்லிட்டேன். எல்லாத்துக்கும் சரின்னு சொன்னவர், நீதான் அந்த வேலையை செய்யணும்னு கண்டிப்பா சொல்லிட்டாரு."
"அதனாலென்ன முதலாளி. நல்ல காண்ட்ராக்ட். நல்லபடியா செஞ்சுடுவோம்."
"சரிப்பா. அவர் நாளைக்கு ஊருக்கு போறாரு. நாளைக்கே ஆரம்பிச்சிடலாம்."
அன்று மாலையில் கண்ணன் மனைவியிடம் அந்தத் தகவலை தெரிவித்தான். "நீ வந்த அதிர்ஷ்டம். பெரிய வேலைதான். முதலாளி கண்டிப்பா எனக்கு ஒரு தொகை கொடுப்பாரு."
மகிழ்ச்சியால் கல்யாணியின் முகம் மலர்ந்தது. அவளுக்கு ஏழு மாதம் முடிந்திருந்தது. "என் அதிர்ஷ்டம்னு சொல்றீங்க? நம்ம பிள்ளையோட அதிர்ஷ்டம்னு சொல்லுங்க."
இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அடுத்த நாள் முதல் கண்ணன் அந்த வேலையை தொடங்கினான். புதிதாக செய்வதென்றால் சுலபம், ஏற்கனவே இருக்கும் பழைய வையரை எடுத்துவிட்டு, புதிதாக வையரை எல்லா பாய்ன்ட்டுக்கும் இழுப்பது கடினம். ஆனால் நமது கண்ணன் திறமைசாலியாற்றே! சட்டு சட்டென்று இழுத்து போட்டு விட்டு மாற்ற ஆரம்பித்தான்.
அவனுக்கு உதவியாக மணி என்னும் சிறிய பையன். வேலை அவ்வளவாகத் தெரியாது என்றாலும் சுட்டிப்பயல். சொல்வதை பொருத்தமாக செய்வான்.
கல்யாணி அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்தாள். எல்லாம் நல்லபடியாக இருப்பதாக பெண் மருத்துவரும் சொல்லிவிட்டார்.
90 சதவிகித வேலையும் முடிந்துவிட்டது. இனிமேல் எல்லாம் ஒழுங்காக பொருத்தப்பட்டிருக்கின்றதா என்பதை சரி பார்க்கும் வேலையும் தொடங்கியாகிவிட்டது.
கண்ணன் மெயின் சுவிட்ச்சுகளை இணைக்கத் தொடங்கினான். எல்லாமே புதிசு. பழையவற்றை எல்லாம் தூக்கி எறிந்தாகிவிட்டது.
"மணி, மெயின் இணைப்பு கொடுடா."
"கொடுத்துட்டண்ணா."
"நான் சொல்லும்போது அணைச்சிடு."
ஒரு வயர் மட்டும் சிக்கிக் கொண்டது. அதை கண்ணன் இழுக்க முயன்றபோது, முக்காலியிலிருந்து கால் நழுவியது. கீழே விழாமலிருக்கும்பொருட்டு எதையாவது பிடிக்க அலைந்த கைகள் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த வயரைப் பிடித்தன.
உடலினுள்ளே பாய்ந்த தாள முடியாத வலியினால், மணி என்று கத்த முயன்ற வாயிலிருந்து ம்ம்ம்மாமா...என்ற அலறல்தான் கேட்டது.
கீழே விழுந்த கண்ணனின் உடல் முதலில் சிறிதாக நடுங்கி பின் உடல் முழுவதும் உதறத் தொடங்கியது. இரு கைகளும், கால்களும் உதறி உதறி துடித்தன.
கண்ணனின் வாயிலிருந்து நுரை கக்க தொடங்கிற்று. மயக்கத்தில் வீழ்ந்தது கண்ணனின் உடல்.
எப்படியோ தகவல் கல்யாணிக்கு போனது. 'கண்ணன் இறந்து விட்டான்' என்று யாரோ ஒருவர் பிதற்ற, "ஐயோ" என்று அலறிய கல்யாணிக்கு அதிர்ச்சியில் பிரசவ வலி தொடங்கியது. பனிக்குடம் உடைந்தது என்பதை அறிந்தவுடன் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு மயக்க நிலையிலேயே தூக்கி செல்லப்பட்டாள்.
**************************************
இதுதானே வாழ்க்கை! மன நிம்மதி என்று நினக்கும் வேளையில், ஆன்மாவைத் துளைத்தெடுக்கும் அடுத்த துன்பத்தை கொடுக்கும் விளையாட்டு என்றுதான் இந்த மனித வாழ்வில் நிற்கப் போகிறது?
உயிருடன் பிழைத்த கண்ணனுக்கு கிடைத்தெல்லாம் வலிப்பு நோயும், உயிரற்று கிடந்த கல்யாணியின் உடலும், சிவந்த சின்னஞ்சிறு கைகளையும், கால்களையும் உதைத்து வாழ்வின் முதல் அழுகையை தொடங்கிய குழந்தையும் தான்.
எந்த மருத்துவமனையிலும் கண்களில் நீர் திரள ஒரு ஆண் மகன் நிற்பதைப் பார்த்தால் அவன் அவனுக்குரிய அன்பை இழந்து விட்டானென்று அர்த்தம். கீழே விழுந்து கதறக் கூட அவனால் முடியாது. ஆணின் தலைவிதி அது.
உலகை மறந்து, வாழ்வை மறந்து, தன்னிலை மறந்து, கைக்குழந்தையை சுமந்து கொண்டு அந்த ஆண் நின்றிருந்தான்.
இனி அவன் இழக்க என்ன இருக்கின்றது - ஒன்றே ஒன்றைத் தவிர!
விரைவில்:
முடிவு பாகம்: "வாழ்வின் கடைசி தோல்வி."
************************************
நன்றியுடன்,
பாரத்ராம் ராஜாங்கம்.
05/05/2020
பாகம் 2
"கண்ணன் இல்லையா?"
"வெளியே போயிருக்கான். என்ன விஷயம்?"
"கடையில ஒரு ட்ரிப்பர் போயிடுச்சி. அதான், அந்த ட்ரிப்பர மேல தூக்கினாலும் கீழேயே இறங்கிடுது. அதுக்குதான் கண்ணன தேடி வந்தேன்,"
"கொஞ்ச நேரமாகுமே...வேற யாரையாவது அனுப்பட்டுமா?"
இல்ல. கண்ணன் வந்தவுடனே அனுப்ப்புங்க. ஏன்னா, அவனுக்குதான் நம்ம கடை வையரிங்க் நல்லா தெரியும்."
"சரி. அவன் வந்தவுடனே அனுப்பி வெக்குறேன்."
அந்த ஆள் சென்றவுடன் முதலாளி புன்னகைத்தார். எல்லோருக்கும் கண்ணன் தான் வேண்டும். அவன் கை வைத்தால் மறுமுறை கோளாறு வராது என்னும் அளவுக்கு அவன் மேல் நம்பிக்கை.
அது ஒரு சிறிதுமில்லாத, பெரிதுமில்லாத, நடுத்தரமான எலக்ட்ரிகல் கடை. விற்பனை மட்டுமில்லாமல் மின்சார பழுது பார்க்கும் ஆட்களையும் வேலைக்கு வைத்திருந்தார் அந்தக் கடை முதலாளி. ஆனால் கண்ணன் வந்த பின்பு வாடிக்கையாளர் எல்லோரின் மனதிலும் நல்ல பெயரை வாங்கிவிட்டான். அவனின் பொறுப்பான வேலையும், என்ன பழுது என்பதை எடுத்துரைக்கும் பணிவும் அவனுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது.
சைக்கிளை மிதித்துக்கொண்டு கண்ணன் வந்தான்.
"கண்ணா, நம்ம தெரு முனை துணிக்கடை இருக்குல்ல. அதுல ட்ரிப்பர் ஸ்விட்ச் போயிடுச்சாம். புதுசு ஒண்ணு எடுத்துக்கிட்டு போய் அத மாட்டி விட்டுடு."
"சரி முதலாளி."
"இரு. சாப்பிட்டியா?"
"இல்லைங்க"
"அப்போ சாப்பிட்டிட்டு போ. ஒண்ணும் அவசரமில்ல."
"பரவாயில்ல முதலாளி. சின்ன வேலைதானே. சட்டுன்னு முடிச்சிட்டு வந்துடுறேன்."
அவன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு பெருமூச்சை விட்டு, "பாவம்" என்று மட்டும் சொன்னார்.
கேசவனின் வாழ்க்கையில் மாற்றங்கள் அதிகம் நடந்துவிட்டன. தையற்கடையில் சேர்ந்து, வேலை நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவன், தனது கலகலப்பான பேச்சினால் வாடிக்கையாளர்களை கவர்ந்து விட்டான். பணம் சேர்த்துவிட்டு ஒரு சிறிய தனிக்கடையை திறந்துவிட்டான். அவனுடன் இன்னுமொரு தையற்காரர், ஒரு உதவியாளன் என்று சின்ன ஸ்தாபனத்தை நிறுவியவன், அதற்கு மேல் தாமதிக்காமல் திருமணமும் செய்துவிட்டான். அவனது திறமையால், அவன் படிப்படியாக முன்னேறுவிடுவான் என்பது உறுதியாகத் தெரிந்தது.
கண்ணன் எப்போதாவது கேசவனைப் பார்ப்பதோடு சரி. இருவருக்கும் வேலை அதிகம் என்பதால் அடிக்கடி சந்திப்பதில்லை. அதே சமயத்தில், கேசவனின் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக இருந்தவன் கண்ணனே. இருவருக்குமிடையே என்றும் தேயாத நட்பு இருந்தது. கால ஓட்டத்தில் கேசவனுக்கு இரு குழந்தைகளும் பிறந்துவிட்டனர்.
கண்ணன் தன்னைப் போன்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்த இரு பிரம்மச்சாரி வாலிபர்களுடன் சேர்ந்து ஓர் அறையை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தான். வீண்செலவுகள் எதுவும் செய்வதில்லை என்றாலும், பணத்தை அதிகம் சம்பாதிப்பதை அவன் விரும்பவில்லை. வேலைக்கேற்ற ஊதியம் என்பதே அவன் விருப்பம்.
வேலையை முடித்துவிட்டு, நம்முடைய மூச்சு அடைத்துப் போகுமளவிற்கு ஊதியம் கேட்பவர்களை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டுவிட்டாலோ, 'நான் உன் உயிரை காப்பாற்றியிருக்கிறேன்' என்பதில் தொடங்கி, இந்திய அரசியலையும், உலக அரசியலையும் அலசி, கடைசியில் அவர்களின் கடை முதலாளியைத் திட்டுவதில் முடிப்பார்கள். நம் நிலையோ பரிதாபம். வேலைக்கான பணம் அதிகம் என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நமக்கு உடன்பாடு இருக்குமென்பதால் வேறு வழியின்றி கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவோம்.
கண்ணன் எந்த சமயத்திலும் அவ்வாறு செய்ததில்லை. அதனால் அவன் கேட்கும் பணத்தை எவ்வித எதிர் கேள்வியுமில்லாமல் கொடுக்கலாம். இப்படி இருப்பவனிடம் எப்படி பணம் சேரும்?
ஒரு ஞாயிற்றுக்கிழமை கேசவன் கண்ணனைப் பார்க்க வந்தான்.
"கண்ணா, எப்படிடா இருக்க?
"வாடா வா. நல்லா இருக்கேன். என் தங்கச்சி நல்லாயிருக்கா?"
"நல்லாயிருக்கா. ஏண்டா, ஒரு செல்ஃபோன் வாங்க மாட்டியா?"
"இருக்குடா. ஆனா, அது முதலாளி கொடுத்திருக்காரு. வேல விஷயமா மட்டும்தான் பேசணும்."
"உன்ன திருத்தவே முடியாது. விடு. இப்போ நானொரு முக்கியமான விஷயமா வந்திருக்கேன்."
"என்ன, சொல்லுடா?"
"நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?"
கண்ணன் வாய் விட்டு சிரித்தான். "கேசவா, நீயே இப்படி பேசலாமா? இது ஒண்ணுதான் எனக்கு குறைச்சல்!"
"கண்ணா, இப்படி சொல்லலாமா? நமக்குன்னு யாரு இருக்கா? உன்ன கவனிச்சுக்க ஒருத்தர் வேண்டாமா? நான் உனக்கு கெடுதலா சொல்வேன்?"
"அப்படி இல்லடா. கல்யாணம் செஞ்சுகிட்டா ரெண்டு பேருக்கு சம்பாதிக்கணும். மட்டுமில்லாம, என் கிட்ட இருக்குறது ஏழ்மையும், தனிமையும்தான். இத பங்கு போட்டுக்க யாரு வருவாங்க?"
"சம்பாதிக்கிறது என்னடா பெரிய விஷயம். நாம என்ன பணத்தோடவா வளர்ந்தோம்! இதோ பாரு. என் வீட்டுக்காரி அவளுக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு பத்தி நேத்துதான் சொன்னா. நல்ல பொண்ணாம். கிட்டத்தட்ட நம்மள மாதிரிதான். அம்மா இல்ல. அப்பாவும் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி போயி சேர்ந்துட்டாரு. பனிரெண்டாவது வர படிச்சிருக்காம். பணம் காசு எல்லாம் ஒண்ணும் கிடையாது. ஆனா தங்கமான மனசு. ம்... அப்படி இருக்குறவங்களுக்குதானே இப்படியெல்லாம் நடக்கும். சரி. உனக்கேத்த நல்ல பொண்ணு. நான் உனக்கு தப்பா கொண்டுவருவேனா?"
கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.
"கல்யாணம் பண்ணிக்கிட்டா தனி வீடு பாக்கணும். வாடகை செலவு அதிகமாகும். ரெண்டு வயிறுக்கு சம்பாதிக்கணும். குழந்த குட்டின்னு வந்துட்டா, செலவு இன்னமும் அதிகமாகும்." (குழந்தை என்ற வார்த்தையை சொல்லும்போது கண்ணனின் இதயத்தில் ஒரு சிறு நடுக்கம் உன்டாயிற்று. அது இன்பமா அல்லது நடுக்கமா என்பது புரியவில்லை).
"அதெல்லாம் பார்த்துக்கலாம். வயசு போயிடுச்சுன்னா திரும்ப வருமா? இந்தப் பொண்ணும் உனக்கு ஏத்த மாதிரி இருக்கு. பொண்ண வந்து பாரு. நல்லதாகவே நடக்கும்."
அந்தப் பேச்சு வரும்வரை கண்ணன் திருமணத்தைப் பற்றி நினைத்ததேயில்லை. கேசவனைத் தவிர, இந்த உலகில் யார் இதை சொல்லியிருந்தாலும் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் 'இல்லை' என்று கண்ணன் சொல்லியிருப்பான்.
"அடுத்த ஞாயிற்றுக்கிழமை போய் பார்த்துடலாமா?"
கண்ணன் சரியென்று தலையாட்டினான்.
ஞாயிறும் வந்தது. கேசவன் இரு சக்கரவாகனத்தில் வந்து கண்ணனை அழைத்துச் சென்றான். அவன் மனைவி முன்னமே பேருந்தில் சென்று விட்டாள். நாத்தனார் பொறுப்பல்லவா! பெண்ணுடன் பேசிப்பழகி, உளவுத்துறை போல், பெண்களுக்கே உரித்தான மனதில் இருப்பதை முகத்தை வைத்தே தெரிந்து கொள்ளும் ஆற்றலால், சில இரகசியங்களை தெரிந்து கொள்ள.
கண்ணனும் வந்து பெண்ணை பார்த்தான். இரகசியங்கள் எதுவும் தேவைப்படவில்லை. அந்தப் பெண் ஏழ்மையிலும், சோகத்திலும் அடிபட்டு, புதுவித தேவதையாக கண்ணனின் கண்களுக்குத் தெரிந்தாள்.
அப்புறமென்ன! ஒரே ஒரு அறையைக் கொண்ட சிறு குடித்தனத்தை கண்ணன் தேடி பிடித்துவிட்டான். கண்ணன் முதலாளி முன்னிலையில், கேசவனும், அவன் மனைவியும் உறவு சான்றாக நிற்க, கோயிலில் கண்ணன் கல்யாணியின் கழுத்தில் மாலையிட்டான். அருகிலிருந்த உணவகத்தில், அனைவருக்கும் கண்ணனின் முதலாளி மதிய உணவு விருந்தளித்தார். ஒரு ஏழையின் திருமணம் இவ்வாறு இனிதே நடந்து முடிந்தது.
குடும்பம் தொடங்குவதற்குத் தேவையான பொருட்களை, கேசவன் தங்கையின் சீதனமாக கொடுத்து விட்டான்.
மனைவி வந்தபின் வாழ்க்கை மாறிப் போனது. கல்யாணி கணவன் மீது வைத்திருந்த அளவில்லாத அன்பினால் இருவரது வாழ்விலும் இன்பத்தின் சாயல் படறத் தொடங்கியது. இருவருமே துன்பத்தை மட்டுமே தாங்கியவர்கள் என்பதால் இன்பத்தின் உண்மையான சுவை நம்மை விட அவர்களால் நன்கு உணரமுடியும்.
முதலாளி கண்ணனின் சம்பளத்தை சற்று உயர்த்திக் கொடுத்தாரென்றாலும், கண்ணன் முன்பைவிட அதிகமாக உழைக்க ஆரம்பித்தான். அவனுடைய அடிப்படை குணத்தில் எந்த மாற்றமும் இல்லையென்பதால், ஏமாற்றிப் பிழைப்பது அறியாமல், அதிகமாக உழைத்து பணம் சேர்க்க ஆரம்பித்தான்.
ஒரு நாள் கண்ணன் அப்பாவாகப் போகிறான் என்பதை கல்யாணி அவனிடம் கூச்சத்துடன் சொன்னாள். இந்த செய்தி கண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததென்றாலும், கல்யாணியிடம்,
"ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கும்னு நான் கனவு கூட கண்டதில்ல."
மனைவியின் தலை குனிந்து வெட்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தவன், "அதே சமயம்...கொஞ்சம் கவலையாகவும் இருக்கு."
"எதுக்குங்க கவலப்படுறீங்க?"
"குழந்தைன்னா...அத நல்லா பாத்துக்கணும். படிக்க வைக்கணும்...நான் பட்ட கஷ்டமில்லாம அந்தக் குழந்தைய வளர்க்கணும்..."
"கவலப்படாதீங்க. நாம வாழ்க்கையில் பார்த்த, அனுபவித்த துன்பங்களை நம்ம குழந்தைகளுக்கு வராம செய்றதுதானே அப்பா அம்மா கடமை. நீங்க எங்கள நல்லா பார்த்துப்பீங்க."
இந்த அன்பு வார்த்தைகள் கண்ணனுக்கு மன அமைதியைத் தந்தது.
துன்பமறிந்த மனைவி துணையிருக்கையில் ஒரு மனிதன் என்னதான் செய்ய இயலாது!
தன்னாலியன்றவரை மனைவிக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தான். அந்த தெருவில் ஒரு வயதான அம்மா இருந்தார்கள். கண்ணன் வேலைக்குச் சென்ற பின் அவர்கள் வந்து கல்யாணியுடன் இருந்தார்கள். ஏழைக்கு ஏழைதானே துணையாக இருக்க முடியும்!
கண்ணன் ஒரு நாள் கடைக்கு சென்றபோது முதலாளி அவர்கள்,
"கண்ணா, வா..வா.. மூணாவது தெருவிலிருக்கிற மளிகைக் கடைக்காரர் வந்திருந்தார். அவர் ஒரு மாசம் ஊருக்கு போறாராம். அந்த சமயத்துல, அவர் வீட்டுக்குள்ள இருக்குற மொத்த வையரிங்க மாத்தணுமாம்! வீடு கட்டி நாப்பது வருஷமாச்சாம். பொருள், கூலி எல்லாம் சேர்த்து ரெண்டு லட்சம் ஆகும்னு சொல்லிட்டேன். எல்லாத்துக்கும் சரின்னு சொன்னவர், நீதான் அந்த வேலையை செய்யணும்னு கண்டிப்பா சொல்லிட்டாரு."
"அதனாலென்ன முதலாளி. நல்ல காண்ட்ராக்ட். நல்லபடியா செஞ்சுடுவோம்."
"சரிப்பா. அவர் நாளைக்கு ஊருக்கு போறாரு. நாளைக்கே ஆரம்பிச்சிடலாம்."
அன்று மாலையில் கண்ணன் மனைவியிடம் அந்தத் தகவலை தெரிவித்தான். "நீ வந்த அதிர்ஷ்டம். பெரிய வேலைதான். முதலாளி கண்டிப்பா எனக்கு ஒரு தொகை கொடுப்பாரு."
மகிழ்ச்சியால் கல்யாணியின் முகம் மலர்ந்தது. அவளுக்கு ஏழு மாதம் முடிந்திருந்தது. "என் அதிர்ஷ்டம்னு சொல்றீங்க? நம்ம பிள்ளையோட அதிர்ஷ்டம்னு சொல்லுங்க."
இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அடுத்த நாள் முதல் கண்ணன் அந்த வேலையை தொடங்கினான். புதிதாக செய்வதென்றால் சுலபம், ஏற்கனவே இருக்கும் பழைய வையரை எடுத்துவிட்டு, புதிதாக வையரை எல்லா பாய்ன்ட்டுக்கும் இழுப்பது கடினம். ஆனால் நமது கண்ணன் திறமைசாலியாற்றே! சட்டு சட்டென்று இழுத்து போட்டு விட்டு மாற்ற ஆரம்பித்தான்.
அவனுக்கு உதவியாக மணி என்னும் சிறிய பையன். வேலை அவ்வளவாகத் தெரியாது என்றாலும் சுட்டிப்பயல். சொல்வதை பொருத்தமாக செய்வான்.
கல்யாணி அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்தாள். எல்லாம் நல்லபடியாக இருப்பதாக பெண் மருத்துவரும் சொல்லிவிட்டார்.
90 சதவிகித வேலையும் முடிந்துவிட்டது. இனிமேல் எல்லாம் ஒழுங்காக பொருத்தப்பட்டிருக்கின்றதா என்பதை சரி பார்க்கும் வேலையும் தொடங்கியாகிவிட்டது.
கண்ணன் மெயின் சுவிட்ச்சுகளை இணைக்கத் தொடங்கினான். எல்லாமே புதிசு. பழையவற்றை எல்லாம் தூக்கி எறிந்தாகிவிட்டது.
"மணி, மெயின் இணைப்பு கொடுடா."
"கொடுத்துட்டண்ணா."
"நான் சொல்லும்போது அணைச்சிடு."
ஒரு வயர் மட்டும் சிக்கிக் கொண்டது. அதை கண்ணன் இழுக்க முயன்றபோது, முக்காலியிலிருந்து கால் நழுவியது. கீழே விழாமலிருக்கும்பொருட்டு எதையாவது பிடிக்க அலைந்த கைகள் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த வயரைப் பிடித்தன.
உடலினுள்ளே பாய்ந்த தாள முடியாத வலியினால், மணி என்று கத்த முயன்ற வாயிலிருந்து ம்ம்ம்மாமா...என்ற அலறல்தான் கேட்டது.
கீழே விழுந்த கண்ணனின் உடல் முதலில் சிறிதாக நடுங்கி பின் உடல் முழுவதும் உதறத் தொடங்கியது. இரு கைகளும், கால்களும் உதறி உதறி துடித்தன.
கண்ணனின் வாயிலிருந்து நுரை கக்க தொடங்கிற்று. மயக்கத்தில் வீழ்ந்தது கண்ணனின் உடல்.
எப்படியோ தகவல் கல்யாணிக்கு போனது. 'கண்ணன் இறந்து விட்டான்' என்று யாரோ ஒருவர் பிதற்ற, "ஐயோ" என்று அலறிய கல்யாணிக்கு அதிர்ச்சியில் பிரசவ வலி தொடங்கியது. பனிக்குடம் உடைந்தது என்பதை அறிந்தவுடன் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு மயக்க நிலையிலேயே தூக்கி செல்லப்பட்டாள்.
**************************************
இதுதானே வாழ்க்கை! மன நிம்மதி என்று நினக்கும் வேளையில், ஆன்மாவைத் துளைத்தெடுக்கும் அடுத்த துன்பத்தை கொடுக்கும் விளையாட்டு என்றுதான் இந்த மனித வாழ்வில் நிற்கப் போகிறது?
உயிருடன் பிழைத்த கண்ணனுக்கு கிடைத்தெல்லாம் வலிப்பு நோயும், உயிரற்று கிடந்த கல்யாணியின் உடலும், சிவந்த சின்னஞ்சிறு கைகளையும், கால்களையும் உதைத்து வாழ்வின் முதல் அழுகையை தொடங்கிய குழந்தையும் தான்.
எந்த மருத்துவமனையிலும் கண்களில் நீர் திரள ஒரு ஆண் மகன் நிற்பதைப் பார்த்தால் அவன் அவனுக்குரிய அன்பை இழந்து விட்டானென்று அர்த்தம். கீழே விழுந்து கதறக் கூட அவனால் முடியாது. ஆணின் தலைவிதி அது.
உலகை மறந்து, வாழ்வை மறந்து, தன்னிலை மறந்து, கைக்குழந்தையை சுமந்து கொண்டு அந்த ஆண் நின்றிருந்தான்.
இனி அவன் இழக்க என்ன இருக்கின்றது - ஒன்றே ஒன்றைத் தவிர!
விரைவில்:
முடிவு பாகம்: "வாழ்வின் கடைசி தோல்வி."
************************************
நன்றியுடன்,
பாரத்ராம் ராஜாங்கம்.
05/05/2020
Make a happy ending.. No more sadness
ReplyDeleteThanks, Ravi
DeleteAwaiting next part...idhuvaraikum kadhaiyoda azhaga travel panna mudinjadhu..
ReplyDeleteThanks Saranya..
Delete