பக்கங்கள்

Friday, May 29, 2020

Reviewing Cinema - My perspective


A few years ago, I took watching movies as a serious hobby. I would like to stress 'serious' here because, after a while, I realized that I was entitled to expect something from movies for the money and time I spend.

Therefore, whatever the movie maybe, I started to keenly observe and give my feedback to my friends. Whatever comments I gave/give are my personal opinions and need not be correct to the other viewers.

Here,  I am trying to explain what I want in movies, how they should be, what excites me, and what disappoints me. once again, these are my personal opinions and maybe totally idiotic for a person working in the film industry or to another cinema lover like me. Well, all fingers are not the same. If you point out my mistakes I will surely take those into my mind.  

Cinema is the next advanced version of stage drama. Using technical advancements, we can present a picture, which will be impossible in a stage drama. In simple terms, too many dialogues are not needed in a movie like a stage drama. If the differentiation does not exist, the purpose of making that movie fails. 

Art of movie making and points I keep in my mind before I give any comments: 

Story - of course, this is the first step. I'd like to brief only two methods that I value. There are more, like copying from an international movie and making it Indianised and making it a success. For example, 'Thozha' movie from 'Intouchables' or 'Gajini' from 'Momento'. That list is endless, therefore we'll focus on only two other methods being used frequently. 

One is - a storyline can emerge from an incident/s, which happened in the real world. Even top movie makers use this technique. They pick up a controversial or a popular incident and ornament it around with their touch and present to us. I have seen a few nice movies and few worst movies created like this.

Next is, creating a story by asking a simple question "what if". Even we can come up with ideas. For example, today I watched a Hindi movie "Lunchbox". The storyline is - what if 100% fail-proof Mumbai lunch delivery gives a lunchbox to a wrong address, and communication starts with one-paged letters - between a housewife and a lonely widower. Another example is, what if a nice man's tired sleep in a metro train is wrongly assumed as a drunkard and becomes viral in social media - 'Vikrithi (Malayalam movie).    

I prefer the second one most of the time. Because it needs an interesting, imaginative question and developing one line into a 120 minutes movie. It doesn't mean the first type is wrong but if we know the incident, órnamanting will be higher, which some times totally spoils that storyline.

Either way, developing from one line to a complete movie, it requires a tremendous effort. How the story develops, how many characters are going to be there, how those characters will be used, how to maintain continuity without distractions etc. It's a tough job.

My first expectation would be on the above - the story and how well it is developed and presented, and how unique the presentation is! The uniqueness should be such that - it should be pointed or referred to in the future. If the story and presentation fail, it is a big loss of my time by watching it.

Screenplay - I do not really know the entire aspects of the screenplay, though I know it is about how each scene of the entire story should be captured. I figure that if a movie makes me involved without any prejudices, the screenplay is good. If not, I'll remember it and be forced to comment.

Now we must observe acting skills. A good scene can be totally spoilt by bad acting. There's a catch here. Are the actors selected for a story - in the trust that they'll be able to deliver whatever is required or a story is searched for a particular actor? This is the biggest compromise we see in Indian movies. Nevertheless, if it is a good story and actors have done good acting, who is going to complain?

Unfortunately, here comes the popularised image of an actor in our place. Even a simple face emotion of a star is hailed and praised as excellent whereas in another movie an unknown person would have performed excellently but it will go unnoticed. In my opinion, a recent example is Guru Somasundaram's acting in 'Joker' Tamil movie (are you aware of that name?). Many of our heroes couldn't have done that as flawless as Guru did.

So, if an actor, irrespective of his popularity, not able to fulfill the expectation, it makes me sad. (many times, the story is modified to the level of an actor's acting skills!!). It deserves a comment.
   
Then comes the BGM (Back Ground Music) plus songs (in case of Indian films). We like good songs but if the songs distract us, or slows the story's flow - they're only useful for TV music channels. The audience won't like it. That's the reason why not only now but in the past too, we have seen few movies flopping but songs from those movies are super hit. So this is another aspect that we should look into.

Editing - I don't know much about this so I can not comment. 

There are a few more important inside jobs, which are blind to us, let's not bother about them.

Finally, who is responsible for bringing out the best in all the above points? Yes, the director of the movie. As long as the movie is good or satisfactory, it is clear that the director has done his job perfectly. Again, I don't have any prejudices against any director but I see few audiences firmly believing that - if it is directed by one particular director it should be appreciated, regardless of whether they have actually seen the movie or not.

In my younger days, it was Manirathinam. I couldn't understand why he was praised so high! I don't intend to say all his movies are bad. How can we simply give marking just by looking at the candidate's name? : ) Nowadays, it is Shankar. But audiences are clearer now. The frenzy lasts for one or two days. Then the movie gets what it deserves. 

I don't go to movies for a director's name. I don't even know what's the name of one of my favorite movies - Shawshank Redemption's director. After watching 'Ínception', I searched for the director's name and found that it is Christopher Nolan. But I was completely unaware that he was the director of, 'Insomnia', 'Batman Begins', and 'The Dark Knight raises'. His work should interest us not his name.

Therefore, I humbly submit the above points to substantiate the way I see movies and where I find glories and where I find the disappointments. This approach could be entirely or partially false. I will be very glad if you can show me my flaws and guide me to a better approach.

Thanks for reading

*********************************
R.Bharathram
29/05/2020 




    





Wednesday, May 6, 2020

அனாதையின் கரங்கள் (4) - வாழ்வின் கடைசி தோல்வி


இது விந்தையான உலகம். பல கோடிக்கணக்கான உயிரினங்களும், கோடிக்கணக்கான மனிதக்கூட்டமும் தினமும் இன்னல்களையும், இன்பங்களையும் உள்வாங்கிக் கொண்டு, நான் தான் பெரியவன், இதோ என் இனம்தான் பெரியது என்று பிதற்றிக்கொண்டு, தங்களுக்குள் உறவாடிக்கொண்டோ அல்லது அடித்து அழித்துக்கொண்டிருந்தாலும் இந்த உலகம் யாரையும் கண்டுகொள்ளாமல் அது அதன் பாட்டுக்கு இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. சூரியனின்  ஒரே ஒரு ஒளித்துகளுக்கு ஈடாகாத நாமோ நமது நாடகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. கல்யாணியின் நான்காம் நினைவு நாள் (மற்றும் கண்ணனின் நோயின் நான்காம் ஆண்டு விழா). கண்ணன் மனைவியின் புகைப்படத்திற்கு முன் விளக்கேற்றிவிட்டு வணங்குகிறான்.

இந்த நான்கு வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. முதன்மையானது கண்ணனின் நோய் அல்லது உடல் நிலை அவனிடம் நிலைத்துவிட்டது. பல மருத்துவர்களை பார்த்து, அவர்களும் பல பரிசோதனைகளை செய்து மருந்து கொடுத்துப்பார்த்தாலும், அவ்வப்போது வலிப்பு வந்து மயங்கி விழுவது நிற்கவில்லை. கடைசியில் தினமும் மாத்திரைகளை சாப்பிடுமாறு எழுதிக்கொடுத்துவிட்டு, இந்த நோய் மூளையின் எங்கோ ஏற்படுகின்ற கோளாறு என்றும், இதை வெல்ல முடியாவிட்டாலும், கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும், கட்டுக்குள் கொண்டு வருவது மூளையிடம் தான் உள்ளது (!) என்றும், கட்டுக்குள் கொண்டுவர மாத்திரைகள் உதவி செய்யலாம் என்றும் சொல்லிவிட்டனர். இதற்கு மேல் மருத்துவர்களை பார்க்க பணமில்லாததால், கடவுளிடம் பாரத்தை போட்டுவிட்டு, மாத்திரைகளை நம்பி கண்ணன் வாழலானான்.

அடுத்த மாற்றம் அவன் வேலை இழந்தது. கல்யாணியின் சாவுக்கு சில நாள் கழித்து அவன் வேலைக்கு சென்றான். முதலாளி அவனை தனியே அழைத்தார்.

"கண்ணா, எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். என் வாழ்க்கையில நான் பார்த்தவர்களில் நேர்மையானவன் நீ. ஆனா உனக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்க கூடாது."

சற்று நேரம் அவனைப் பார்த்து இருந்தவர், தயக்கத்துடன் தொடர்ந்தார்.

"கண்ணா, இந்த வேலை சுலபமானதில்ல. உனக்கே தெரியும். கரணம் தப்பினால் மரணம்தான். நீ ஏதாவது வேலை செஞ்சிக்கிட்டிருக்கும்போது உனக்கு வலிப்பு வந்திடுச்சினா உன் உயிருக்கே ஆபத்து. இந்த நிலமை இருக்குறவங்கள நாங்க வேலைக்கே வெச்சுக்க கூடாது. வேணும்னா நீ கடையிலேயே உக்காந்துகிட்டு வரவங்களுக்கு பொருள் எடுத்து தர வேலை செய்யலாம்."

கண்ணனுக்கு மட்டும்தான் தெரியும். இந்த தொழிலுக்கு வருவதற்கு அவன் எந்த வயதிலிருந்து பாடுபட்டான் என்பது.

"ரொம்ப நன்றி முதலாளி. நான் கடையில உக்காந்துக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது. கடைக்கு வரவங்க எல்லாரும் என்ன பரிதாபமா பாப்பாங்க. அது என் மனச கஷ்டப்படுத்துமே தவிர நல்லது செய்யாது. உங்களுக்கு நான் என்னிக்கும் நன்றி கடன்பட்டிருக்கேன். நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. நீங்களும், உங்க குடும்பமும் நல்லாயிருக்கணும், முதலாளி. வரேன்."

அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு கண்ணன் வந்துவிட்டான். அவன் சொன்னதில் ஒன்றும் தவறில்லையே!

கேசவன் கண்ணனை தன் கடைக்கு வருமாறு அழைத்தான். "நீ வந்து அங்க என் கூட இருடா" என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தான். ஆனால் கண்ணன் அதற்கும் மறுத்துவிட்டான்.

"கேசவா, உன் ரெண்டு பிள்ளைங்களும் பெரிசாகிட்டாங்க. உனக்கு செலவு அதிகமாகிக்கிட்டே இருக்குமே தவிர குறையாது. நம்ம நட்புக்குள்ள எப்பவுமே விரிசல் விழுந்திடக்கூடாது. உனக்கு என்ன நல்லா தெரியும். ஏதாவது வேலை செஞ்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிடுவேன். கவலப்படாதே."

கண்ணனின் சொல்லில் இருந்த உண்மை கேசவனுக்கு புரிந்தது. அதனால் அவனைக் கட்டாயப்படுத்த முடியவில்லை.

கண்ணன் அதே தெருவிலிருந்த, முன்பு இருந்ததைவிட சிறிய அறைக்கு குடிபெயர்ந்தான். இந்த மாற்றத்தில் ஒரு நன்மை இருந்தது. வீட்டிற்கு பின்பக்கத்தில், மூலையில் இப்போது வந்துவிட்டாலும், வீட்டிற்கு பின்பக்கத்திலிருந்த மரங்கள் கண்ணனுக்கு ஆறுதலும், மகனுக்கு விளையாட நிழலும் கொடுத்தன. ஏழை பாட்டியம்மாவும் தினமும் வந்து குழந்தையை பார்த்துக்கொண்டார்.

இந்த மாற்றங்கள் வந்தாலும் இரண்டு வயிறுகளின் பசியில் மாற்றம் வரவில்லை. கண்ணன் அந்தத் தெருவிலிருந்த வீடுகளுக்கு எந்த வேலை இருந்தாலும் செய்து கொடுத்து, அவர்கள் தரும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நடத்தினான். சில வேலைகள் கடினமாக இருந்தாலும் கண்ணன் பொருட்படுத்துவதில்லை. 

கேசவனின் பொறுப்புகள் அதிகமாகிவிட்டபடியால் முன்புபோல் அடிக்கடி வந்து கண்ணனை பார்க்க வரமுடியவில்லை.

ஒரு நாள், அடுத்த தெருவிலிருந்த மளிகைக் கடைக்கு மொத்த சரக்குகள் வந்தன. கடை முதலாளியின் மகன் கண்ணனுக்கு சொல்லியனுப்பினான்.

கண்ணன் ஓட்டமாய் ஓடி வந்தான். 

"சொல்லுங்கய்யா."

"கண்ணா, அந்த வண்டியிலிருக்குற சரக்கையெல்லாம் கடைக்குள்ள கொண்டு வந்து வை. அம்பது ரூபாய் தரேன்."

"சரிங்கய்யா."

வேறு யாராக இருந்தாலும் 200ரூபாய்க்கு கீழ் குறைய மாட்டார்கள். டெம்போ வண்டி முழுவதும் சரக்கு. கண்ணனின் வறுமை பேரம் பேச அவனுக்கு வாய்ப்பளிப்பதில்லை. 

அவனின் கெட்ட நேரம். அரிசி மூட்டைகள், கிலோ கணக்கில் பருப்பு மூட்டைகளை எல்லாம் ஒழுங்காக வண்டியிலிருந்து எடுத்து, கடைக்குள் அடுக்கி வைத்துவிட்டான். காய்கறிக்கூடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். தக்காளி கூடயை தூக்கும்போது திடீரென தரை காலிலிருந்து நழுவுவதை உணர்ந்தான். வலிப்பின் தாக்கம் ஆரம்பித்தது. கூடையை கீழே போட்டவன், கையையும் காலையும் உதைத்துக்கொண்டு கீழே விழுந்தான்.

கண்ணன் விழுந்தது ஒருபுறம் என்றால் தக்காளி பழங்கள் மொத்தமும் வேறு பக்கத்தில் விழுந்தன. சில உருண்டோடி சாக்கடையிலும், சில வண்டிகளில் அடிபட்டும் சிதைந்தன. அப்போதென்றா கடையின் முதலாளி வரவேண்டும்!

"டேய், யாருடா இந்த வேலையை காக்கா வலிப்புகாரன்கிட்ட கொடுத்தது? ஐயோ! பழமெல்லாம் வீணா போகுதே! தண்டசோறு, நீ எடுத்து வைக்க வேண்டியதுதானே!"

விழுந்து மயங்கிய கண்ணனுக்கு இது மட்டுமே காதில் கேட்டது.

"சோடா வாங்கிட்டு வா"

"புடிச்சிக்கோ.. கால் துடிக்குது பாரு"

"கும்பல் கூடாதீங்கப்பா"

மளிகைக் கடைக்காரருக்கு கோபம் தணியவில்லை.

"பழுக்க கம்பிய காச்சி தொடையில ஒரு இழுப்பு இழுத்தா போதும். எங்க காலத்துல நாங்க கொடுக்குற வைத்தியம் அதுதான். அதுக்கப்புறம் வருதா பாருங்க"

சோடாவை கொஞ்சம் முகத்தில் தெளித்தனர். கலங்கிய நிலையில் எழுந்த கண்ணன் கொஞ்சம் சோடாவை குடித்து, கையிலே அதை பிடித்துக்கொண்டே தள்ளாடி நடக்கலானான். 

"ஏய், யாராவது புடிச்சுகிட்டு போங்கப்பா. இவன் வீடு தெரியுமா."

பாதி மயக்க நிலையிலேயே கண்ணன் வீடு வந்து சேர்ந்தான். அவனுக்கு நினைவிலிருந்தது காலையிலிருந்து செய்த வேலைக்கு கூலி எதுவுமே கொடுக்கப்படவில்லை என்பதுதான். தள்ளாடிக் கொண்டே தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது அவனே காரணம் சொல்லிக்கொண்டான். "ஆமாம், இழந்த பொருளுக்கு நான்தானே பொறுப்பு. அப்புறம் எப்படி கூலி வரும்?"

ஒற்றையடிப்பாதை மூலம் பின்பக்கம் வந்தவன் அவனுடைய குழந்தையைக் கண்டான். நிழலில், மரத்தினடியில் மண்ணில் ஏதோ கோடு கிழித்துக்கொண்டு இருந்தது இவனைப் பார்த்ததும் அழகாக புன்னகை செய்தது. அவனுக்கு அப்போதுதான் உரைத்தது.

"ஐயோ! நான் இந்த சோடாவாவது குடிச்சேன். என் குழந்தை காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிட்டிருக்காதே!"

மனம் பதைபதைத்து உள்ளே ஓடியவன் எங்கேயாவது காசு கிடைக்குமா என்று கலைத்தவனுக்கு ஐந்து ரூபாய் நாணயம் கிடைத்தது. எடுத்துக்கொண்டு வெளியே ஓடியவன், போகும் போக்கில், "ராஜா, அப்படியே இரு. அப்பா ஏதாவது வாங்கிட்டு வரேன்" என கதறியவன் எதிரிலிருக்கும் சின்னக்கடையில் ஒரு பன் வாங்கி, தாளில் சுற்றிக்கொண்டு ஓடிவந்தான்.

அந்த ரொட்டி உருண்டையை தண்ணீரில் நனைத்து குழந்தைக்கு ஊட்டினான். குழந்தை அதை ரசித்து, சுவைத்து சாப்பிட்டது.

இதைப் பார்த்த கண்ணனுக்கு இதயமே வெடித்து விடும் போலாயிற்று. மனதிற்குள், "கடவுளே, அனாதையான எனக்கு கிடைத்த உணவை கூட இந்தப் பிள்ளைக்கு வாங்கித் தர என்னால் முடியவில்லையே! என்னை ஏன் படைத்தாய்? எனக்கு துன்பம் கொடுத்து ரசித்தாயே, அது போதாதா? இந்த சின்ன உயிருக்கு ஒரு வேளை உணவு வாங்கித்தர முடியாத என்னை, அன்றே குப்பைத் தொட்டியிலேயே சாக விட்டு இருக்கலாமே!"

கண்ணீர் பொங்கிய கண்களை குழந்தை பார்த்துவிட்டால் அது தின்பதை நிறுத்திவிடுமென்பதால், முகத்தை திருப்பிக்கொண்டான். எங்கே, அந்தக் கடவுள் அதையும் குழந்தைக்கு செய்துவிடுவாரோ என்ற பயம் அவனுக்கு.

கேசவன் அன்று மாலை வந்தான்.

"கண்ணா, நல்லாயிருக்கியா? எங்கே என் ராஜா? வாடா வா. இந்தா...இந்த பிஸ்கெட் சாப்பிடு" என்று குழந்தையின் கையில் கொடுத்தான். பாட்டியம்மா இருந்ததால், குழந்தையை விளையாடவும், எப்போதோ கிடைக்கும் நல்ல பிஸ்கெட்டை குழந்தைக்கு கொடுப்பதற்காகவும் அதை தூக்கிக்கொண்டு பின்பக்கம் சென்று விட்டாள்.

"என்னடா? நான் கேக்குறேன் நீ ஒண்ணும் பேசமாட்டீங்கற?"

கண்ணன் மனமுடைந்து அழ ஆரம்பித்தான். பின்பு தேம்பலுடன் கேசவனிடம் எல்லாவற்றையும் சொன்னான். கேசவனுக்கு ஆழ்ந்த வருத்தம் உன்டாயிற்று.

"கண்ணா, நீ நல்லவன். நான் இருக்கேன். என் பசங்களும் வளர்ந்துட்டாங்க. இனிமே நான் அவங்களுக்கு செய்ய பெருசா ஒண்ணுமில்லை. பண்டிகை காலம்னால என்னால வர முடியல. கொஞ்சம் தாங்கிக்கோ. உனக்கு ஏதாவது நான் செய்யுறேன். எனக்கு விஷயம் தெரியாது. கையில பணம் கொண்டு வரல. இந்தா. இந்த 500 ரூபாய வெச்சுக்கோ. அட, வெச்சுக்கோடான்னா"

"கண்ணா, நீ மனச மட்டும் தைரியமா வெச்சுக்கோ. உன்ன கடவுள் கைவிடமாட்டாரு."

கேசவன் ரொம்ப நேரம் பேசினான். ஆனால் கண்ணனுக்கு பெரும்பாலும் காதில் ஏறவில்லை. பாவம். இவன் மட்டுமென்ன, கோடீஸ்வரனா? இவனால் என்ன செய்துவிடமுடியும்? அவ்வப்பொழுது 500 ரூபாய் தரலாம். வேறென்ன முடியும் அவனால்?

மனித வாழ்க்கையின் கடைசி ஆயுதமான மன தைரியம் கண்ணனுக்கு விடை கொடுக்க ஆரம்பித்தது. ஒரு மனிதன் வாழ்வதற்கு காரணம் தேட ஆரம்பித்தாலே அவன் முடிவு ஆரம்பமாகிறது.

ஒரு வாரம் ஓடிவிட்டது. கேசவன் இன்னும் வரவில்லை. அவன் கொடுத்த பணம் தேய்ந்து சில்லறையாகிவிட்டது.

பாட்டியம்மா வந்து, "தம்பி, அரிசியில்ல. கடைசியா இருந்தத பிள்ளைக்கு கஞ்சி வெச்சுக் கொடுத்துட்டேன். நீ என்ன பண்ணுவ? நான் என் வீட்டுல ஏதாவது இருக்கான்னு பாத்துட்டு வரவா?"

"வேணாம்மா", என்றவன், அந்த அம்மாவின் கைகளைப் பிடித்து கண்ணில் ஒற்றி, முகம் பதைத்து அழுதான்.

"ஏனய்யா...எதுக்கு அழுவுற?" என அந்தக் கிழவியும் கண்கலங்கினாள்.

"ஒண்ணும் இல்லம்மா. நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க" என்று சொல்லி அந்தம்மாவை அனுப்பி வைத்தான்.

தூக்கத்தில் சொக்கிய குழந்தையை நெஞ்சில் போட்டு தூங்க வைத்து, ஜன்னலோரம் இருந்த கிழிந்த மெத்தையில் படுக்க வைத்தான். கண்ணனுக்கு தூக்கம் வரவில்லை. தூக்கம் வராததற்கு பசி காரணமல்ல. பசியோடு தூங்கிய இரவுகள் எண்ணிலடங்காதவை. தூக்கம் வராததற்கு காரணம் அவனின் மனதினுள் எழுந்த கேள்விகள் கொடுத்த வலிகளும் வேதனையும் தான். 

'வறுமையின் கொடுமை பசியில் தெரியும். நான் சிறு வயதில் பசியில் ஏங்கியதில்லையே. போராட்டங்களினுள் வளர்ந்து, வாழ்வை வெல்வேன் என்று நம்பியவன் கடைசியில் செய்த சாதனை இந்த பச்சிளம் குழந்தையை பசியில் வாடவிட்டு, வறுமைக்குள் தள்ளி வதங்கவிட்டதுதானே! இதற்காகவா போராடினேன்? என் வாழ்க்கையின் பலன்தான் என்ன?'

'நேர்மையுடன் உழைத்து வாழ்பவன் உயர்வான் என்று கேட்டதெல்லாம் பொய்யா? அதெல்லாம் பொய்யாக இருந்து தொலையட்டும். ஆனால் அந்த பொய்யின் பலனை, வேதனையை எனக்கு கொடுத்திருக்கலாமே! குற்றம் செய்தவனை தண்டிக்காமல், சிறிய குழந்தையை வாட விடும் கடவுளே, உனக்கு இரக்கமே இல்லையா? இப்படித்தான் போகும் என்றிருந்தால் என்னை குப்பை தொட்டியிலேயே கொன்றிருக்கலாமே. ஏன் என்னை வளர வைத்தாய்? ஏன் என்னை அடுத்த மனித உயிரின் துன்பத்தை, ஏக்கத்தை உணரும் வகையில் வளரவிட்டாய்? இந்தப் பிஞ்சு செடி வேர் ஊன்றும் வரையிலாவது என்னை விட்டு வை. அதைக்கூட செய்ய மனமில்லாதவனா நீ? நான் உயிரோடு இருந்து இந்தக் குழந்தையின் ஒவ்வொரு நாளின் போராட்டத்தை காணும் சக்தியில்லாதவன் என்பது உனக்கு தெரியாதா?'

*****************************
(நிகழ்காலம்)

 பின்னிரவுப் பொழுது.
அந்த குறுகிய தெருவின் இருமங்கிலும்பகலிலே நிழலை அள்ளித் தரும் மரங்கள் நிறைந்திருக்கின்றன. இரவினில் இலைகள் அசையாவிடினும்பகலில் தரை வெப்பம் ஏறாத காரணத்தினால் இரவுப் பொழுது குளிர்ந்திருக்கின்றது.

எங்கும் அசைவில்லை.

அந்தத் தெருவிலிருந்த ஒரு பழைய வீட்டின் பின்பக்கத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த சிறிய குடியிருப்பு. சின்னஞ்சிறு சமையலறையைத் தவிர இருப்பது மேலும் ஒரே ஒரு அறைதான். உட்காருவதுசாப்பிடுவதுதூங்குவது எல்லாமுமே அங்கேதான். காரை பெயர்ந்த சுவர்களைத் தவிர அந்த அறைக்கு ஒரு பெரிய ஜன்னல்மற்றபடி உயர்வாக குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை.

அந்த ஜன்னலை ஒட்டியபடி ஒரு கட்டிலும்அக் கட்டிலின் மேல்கிழிந்தபழைய பஞ்சு மெத்தையும் இருக்கின்றன. ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. ஓரங்களிலும்நடுவிலும் ஆங்காங்கே கிழிந்திருந்த போர்வை போர்த்தப்பட்டிருக்கின்றது. ஒருக்களித்துப்படுத்துவலது காலை சிறிது மடக்கியும்இடது காலை நீட்டியும்இரு கைகளையும் முகத்தினருகே மடக்கி வைத்தபடியும்அந்த குழந்தை ஆழ்ந்த நித்திரையிலிருந்தது

அக்கட்டிலை ஒட்டியபடி போடப்பட்டிருந்த மேஜையின் அருகே ஒரு மனிதன் நின்றிருந்தான். அவனது துயரம் தோய்ந்த விழிகள்ஜன்னலின் வழியாகத் தெரிந்த முழுநிலவை நோக்கிக்கொண்டிருந்தன. நிலவினில் எதையோ தேடுவதைப் போல் இருந்தது அவன் பார்வை.

சில நிமிடங்கள் கழிந்தன. மெதுவாக அவன் தனது பார்வையை இவ்வுலகுக்கு கொணர்ந்துபின் சத்தம் எழுப்பாமல் அறையின் குறுக்கும் நெடுக்குமாக - குழந்தை எழுந்திருக்காமல் இருக்கும் பொருட்டு - கால்களை தரையினில் அழுந்தாமல் வைத்து நடந்தான். ஒரு முறை நின்று நிலவையும்தெளிந்த வானத்தில் படர்ந்திருந்த நட்சத்திரங்களையும் ஏக்கத்துடன் பார்த்தான். சில நொடிகள் கழிந்த பின் மறுபடியும் நடந்தான். மனதின் எண்ணப் போராட்டத்தில் சிக்குண்டுவிடுபட வழி தெரியாமல் போராடிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் முகத்தில் சற்று தெளிவு வந்தது. மேஜையின் அருகே வந்தவன் அங்கிருந்த ஒரு வெள்ளைத்தாளில் நடுங்கும் கையினால் பின்வருமாறு எழுதினான்.

என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல. வேறுவழி எதுவும் தெரியாததால் என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன்.

அக்கடிதத்தை மடித்து சட்டைப் பையினுள் வைத்தபடியே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்தான். அவன் முகத்தில் சிறுமலர்ச்சி தோன்றியது. குழந்தையின் அழகால் அவன் மிகவும் கவரப்பட்டான்.

போர்வை குழந்தையின் உடலில் படிந்திருந்ததால்குழந்தையின் சின்ன உடலுக்கு இணங்கபோர்வையின் மேடு பள்ளங்கள் இருந்தன. நிலவின் ஒளியில் அக்காட்சி மிகவும் அழகாக இருந்தது. அவனுக்கு ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது. இக்காட்சியை ஒரு ஓவியன் பார்த்தால் இதை ஒரு அழகான சித்திரமாக வரைந்திருப்பான் என்று நினைத்து மகிழ்வடைந்தான். மனதில் எண்ணவோட்டம் ஓடியது.

அது சரிதான். எல்லாக் குழந்தைகளும் அழகுதானே! உண்மையான அழகு உள்ளத்தில்தான் இருக்கின்றது என்றால் - வன்மம் வாய்ந்தசூழ்ச்சியால் சூழப்பட்ட உலகின் உண்மையை அறியாத தூய உள்ளம் அமையப்பெற்ற குழந்தைகள்தானே அழகு!

இவ்வெண்ணம் தோன்றி மறைந்தவுடன் அவன் நெற்றியில் சுருக்கம் உண்டாயிற்று. மெலிய நடுக்கம் உடல் முழுதும் பரவிச் சென்றது. எந்த எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியூட்டியதோ அந்த எண்ணமே பெரும் பயத்தை விளைவித்தது. கலவரமடைந்த அவன் முகம் சுருங்கி கண்களில் நீர்திரையோடியது. எண்ணங்கள் தோன்றின. "இப்படியா முடிவதுஇல்லையில்லை.." இந்தக் கேள்விக்கான விடையை அவன் எங்கோ தேடினான்.

சிறிது நேரத்தில் சட்டென்று முகத்தோற்றம் மாறியது. கடவுளிடமிருந்து ஆணை கிடைத்தது போலிருந்தது. சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்து கிழித்தெறிந்தான். கைகளால் முகத்தை மூடியபடி அமர்ந்தான். கைவிரல்களுக்கிடையே சூடான கண்ணீர்த்துளிகள் வழிந்தன. அவன் எண்ணமிட்டான்.

என்னதான் செய்வதுஅதையா..எதற்காக இந்நாள் வரை போராடினேனோ அதைக் கைவிடுவதாமுடியாது.... ஆனால் என்ன வழியிருக்கின்றதுநான் அனுபவித்த அதே வாழ்க்கையை என் குழந்தைக்கும் கொடுப்பதாஇல்லை... ஆனால்... துணையில்லாத இந்த அபலக் குழந்தை...? நான் என்ன செய்வேன்? கடவுளே! தயவு செய்து என்னை மன்னித்துவிடு! எனக்கு வேறு வழி தோன்றவில்லை. இரக்கமும்கருணையும் சிறிதுமில்லாத உலகம் இது. இழிநிலையில் கிடந்துமனம் உழன்று துன்புறுவதைவிடநான் செய்வதே சிறந்ததாக இருக்கும். கடவுளே.. இப்பாவச் செயலிற்காக நரகத்தில் நான் எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி. பொறுத்துக்கொள்கிறேன்!

தீர்க்கமுடன் மற்றொரு வெள்ளைத்தாளில் - இம்முறை கைகள் மட்டுமல்ல.. உடலும்மனதும் சேர்ந்து நடுங்க - எழுதினான்.

எங்களின் இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணமல்ல. இக்கொடிய உலகம் எங்களுக்குத் தந்து கொண்டும்என் குழந்தைக்கு தரப்போகும் துன்பங்களிலிருந்தும் விடுவித்துக் கொள்ளவேஇந்த பாவத்தை நான் செய்யப் போகிறேன். வாழ்க்கை தரும் வேதனைகளை விட மரணம் தரப்போவது மோசமாக இருக்க முடியாது. கடவுள் என்னை மன்னிக்கட்டும்...!

இந்த வரிகளுடன்கையொப்பமிட்டுவிட்டு காகிதத்தை சட்டைப் பையில் வைத்து விட்டு குழந்தையைப் பார்த்தான். நேரம் வந்துவிட்டது என்பது அவனுக்கு விளங்கியது. இனி காரியத்தை செய்ய வேண்டியதுதான்!

********************************************
கண்ணன் குழந்தையை கையில் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டான். படுக்கையிலிருந்த போர்வையை எடுத்து, குழந்தைக்கு போர்த்தியபடியே அதை தூக்கி கொண்டு தெருவுக்கு வந்தான்.

அவனின் எதிர்காலம் போல் தெருவும் சூன்யமாகிக் கிடந்தது. அவனிருந்த பகுதிக்கு அருகில்தான் உலகத்தின் முதல் உயிர் தோன்றியதாகச் சொல்லப்படும் கடல் இருந்தது. 

காலியாகிக் கிடந்த தெருக்களில் நடந்து கடற்கரையை அடைந்தான். இனி மணலில் நடக்க வேண்டும். மனம் போகலாமா வேண்டாமா என யோசித்தாலும், கால்கள் தானாகவே கடற்கரை மணலில் நடக்க ஆரம்பித்தன. பொதுவாகவே நடக்கக் கடினமான கடற்கரை மணல், முடிவுக்கு நடக்கும்போது இலகுவாகவா இருக்கும்? ஆனால் இதையெல்லாம் உணரும் திறனில் அவனில்லை.

கடலின் அருகில் வந்தவன், கொஞ்சம் உட்காரலாம் என முடிவெடுத்து மணலில் அமர்ந்தான். 

கடல் அலைகளின் ஓயாத ஒலியினால் குழந்தை விழித்துக்கொண்டது. 

கண்ணனைப் பார்த்து, "அப்பா, நாம ஏன் இங்க வந்தோம்?" என கேட்டது.

"ஒண்ணுமில்ல ராஜா, காத்து வரல. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்" என கிசுகிசுத்தான். 

அலைகளைப் பார்த்தவனுக்கு அப்போது விசித்திரமான ஒரு எண்ணம் வந்தது. 'இந்தக் கடலில் எத்தனை பேர் தற்கொலை செஞ்சுக்கிட்டிருப்பாங்க? கடைசியா அவங்களுக்கு என்ன தோணியிருக்கும்?'

'பாரு, எத்தனை உயிரை காவு வாங்கிகிட்டு இது ஒண்ணும் தெரியாத மாதிரி, எப்பவும் போல அலையடிச்சிக்கிட்டிருக்கு! இதுவும் மனுஷங்கள மாதிரிதான் போல. எவன் இருந்தா என்ன போனா என்ன..!'

"குளிருதப்பா", என குழந்தை சொல்லவும், போர்வையை அதன் உடல் முழுவதும் போர்த்தினான்.

மனம் மறுபடியும் வினோதமாக யோசித்தது. 'இப்ப என்ன? குழந்தையை தூக்கிகிட்டு உள்ள இறங்க வேண்டியதுதான். இங்கேயே இறங்கலாமா இல்ல...அதோ, அங்க கொஞ்ச தூரம் போனா அவ்வளவா ஆழம் இருக்காதுபோல தெரியுதே. அங்க இறங்கலாமா? அட, முட்டாளே, ஆழம் இருந்தாதானே சீக்கிரம் சாக முடியும்.' 

'குழந்தைய கெட்டியா கையுல பிடிச்சுக்கணும். தனியா விட்டுடக்கூடாது. ஆமாம்.. ஆனா, செத்துபோனதுக்கு அப்புறம் இந்த பாழாப் போன கை, குழந்தைய விட்டுடிச்சுன்னா? கடவுளே, என் கடைசி ஆசையா வெச்சுக்கோ. ரெண்டு உடலும் ஒண்ணா கரை ஒதுங்கணும்!'

இப்படியே சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். 'தாமதம் ஆகுதடா. இன்னும் கொஞ்ச நேரம் போனா விடிஞ்சிடும். சீக்கிரம் முடிச்சிடணும். சரிடா, கண்ணா, அவ்வளவுதான் உன் வாழ்க்கை. இந்த நிலைமைதான் வரும்னு இருக்கு...ஆமாம், கேசவனுக்கு தெரிஞ்சா? அழுவான். வேறென்ன செய்ய முடியும். பாவம். அவன் வாழ்க்க நல்லா இருக்க செய் கடவுளே! உம்.. இதை உங்கிட்ட சொல்றேன் பாரு. சரி, தாத்தாவுக்கு தெரிஞ்சா?' 
  
கண்ணனுக்கு மனதில் தாங்க முடியா வேதனை உண்டாயிற்று. 'தாத்தாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு. அவர் வெச்ச செடி இப்படி பட்டுப் போறத பாத்தா...' கண்ணனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

'இப்படியே யோசிக்கக் கூடாது. வா... இறங்கிடலாம்' என்று முடிவெடுத்த கண்ணன், குழந்தையை கையில் தூக்கிக் கொண்டான். அதிகாலை கடல் குளிர் காற்று இருவரது உடலையும் தழுவி சென்றது!

மணற்மேட்டிலிருந்து கீழே இறங்க கால் வைத்தவன் கால் இழுக்கத் தொடங்கியதை உணர்ந்தான். வாழ்க்கையில் சந்தித்திருந்த வேதனைகளிலும், கொடுமையான வலிகளிலும் உச்சமான வலியில், பீதியில் அந்த மனிதன் விழுகிறான்.

'ஐயோ, நான் விழக்கூடாது. என் குழந்த...அது தண்ணீ கிட்ட போயிடும்..யாருமில்லா அனாதை அது...என் உடம்பே விழாதே... நில்லு... அத காப்பாத்து...கடவுளே..' என்றெல்லாம் மனதில் பேசினாலும் மூளைக்குள் இடித்த இடியினால் அவன் அலறியது 'ஆ...' என்றுதான். மயக்க நிலைக்கு முன் கடைசியாக கண்ணன் நினைத்ததெல்லாம், 'என் குழந்தையை காப்பாத்தணும்' என்பதுதான்.

உலகம் எப்போதும் போல் விழிப்பதற்காக தயாரானது. சூரியன் கிழக்கிலிருந்து கடலின் மேல் கிளம்ப தயாராகியது. அன்று சிறிது மேகமூட்டமாக இருந்ததால் சூரியனின் முழு வெளிச்சமும் வர சிறிது நேரமாகும்.

கண் விழித்த கண்ணன் கண்டது மேகக் கூட்டங்களின் பின்னே எங்கோ தோன்றிய சிறிய வெளிச்சம் தான். கறுப்பு மேகங்கள் அதிகாலை ஒளியை மறைத்தன. கடல் அலைகளின் ஓசை காதை நிறைத்தது. 

அவனுக்கு எப்படி இங்கு வந்திருக்கிறோம் என்பது விளங்க சில நிமிடங்களானது.

"யோவ், அறிவிருக்கா? பாத்தா படிச்சவன் போல இருக்க... இங்க என்ன பண்ற..?"

கண்ணன் பதறி எழுந்தான். அவனை சுற்றிலும் நான்கைந்து மீனவர்கள் இருந்தனர். எல்லோருமே உணர்வுபூர்வமாக இருந்ததினால் குழப்பம் தெளிய சில வினாடிகள் தேவைப்பட்டன.

"விடியங்காத்தால கடலுக்கு போலாம்னு வந்தா, இங்க நீ இப்படி கிடக்குற.. அறிவு இல்ல உனக்கு?"

"நான் பாத்தே இருக்கமாட்டேன் அண்ணே! சின்னதா ஏதோ தெரியுதுன்னு உத்துப் பாத்தா கடலு கிட்ட ஒரு குழந்த..அதான் அலறிக்கிண்ணு ஓடி வந்தேன்."

அப்போதுதான் கண்ணன் முழுமையாகத் தெளிந்தான்.

"என் குழந்த, என் குழந்த..." என்று அலற ஆரம்பித்தவனை அடக்கியது ஒரு பெண்ணின் குரல்.

"என் கிட்ட இருக்கு. பாவம். அழக் கூட இல்ல"

அந்த அம்மாவிடம் இருந்து குழந்தையை கண்ணன் பறித்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 

"ஏனய்யா...குழந்தைக்கு அம்மா இல்லியா? உனக்கு என்ன காக்கா வலிப்பா? அப்புடி இருக்குறவன் இங்க வரலாமா? உதச்சிக்கினு கிடக்குற..பாவம், இந்தக் குழந்த இன்னான்னா அப்பாவுக்கு குளிருல நடுங்குதுண்ணு போர்வைய
போத்தி விடுது! எம்மாம் பாசம் உம்மேல வெச்சிருக்கு."

தன் குழந்தையை கட்டி அணைத்தான். இந்த வார்த்தைகளை கேட்கையில், மேகத்தின் இடைவெளியில் சூரியனின் ஒரே ஒரு ஒளி மட்டும் அவன் கண்ணில் பட்டதால், வெட்கி கண்களை மூடிக்கொண்டான்.

"ரொம்ப நன்றிங்க" என தழுதழுத்தவனிடம், "இனிமே இங்க கடலோரம் உன்ன பாத்தா வெட்டி வீசிப்புடுவேன். கிளம்பி வூட்டுக்கு போ" என்று ஆணையிட்டது ஒரு குரல்.

அன்பின் ஆணை. நன்றி சொல்ல மறந்து, எழுந்து மெதுவாக கண்ணன் நடந்தான். அவனுடைய கால்கள் மண்ணில் புதைந்து எழும்போது வரும் கொடிய வலியை உணரும் நிலையில் கண்ணன் இல்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தை அவன் காதில் மட்டும் கேட்கும் வகையில், "அப்பா, பசிக்குதப்பா" என்றது. 

கண்ணன் துடித்துப் போனான். எந்த வார்த்தையை கேட்க கூடாது என்று நினைத்திருந்தானோ, அந்த வார்த்தையை, அந்த நிலையில் கேட்ட போது, மனம் குறுகிப் போனது.

'ஒருவனது வாழ்க்கை அவனுக்கானது அல்ல' என்ற மனித வாழ்வின் அடிப்படை இரகசியத்தை கண்ணன் முழுவதுமாக புரிந்து தெளிந்தான்.

"ராஜா, அதோ அங்க போவோம்பா..அங்க தள்ளு வண்டி இருக்குல்ல, அங்க ஏதாவது கிடைக்கும்"

குழந்தையை அணைத்துக்கொண்டு, கண்ணீர் மல்க கண்ணன் நடந்தான். அந்தக் குழந்தை அப்பாவின் கழுத்தை இரு கைகளால் கட்டிப் பிடித்து, அவனது தோளில் சாய்ந்து தூங்கத் தொடங்கியது.

நமது கண்களுக்கு மெலிந்து, குச்சி போல் காணப்படும் அந்தக் கரங்களின் அணைப்பின் சக்தி அளவிடமுடியாதது. அன்பின் உச்சத்தால் உருவான சக்தி அது. 

அந்த பிஞ்சு கைகளின், பெற்ற தகப்பனை கட்டி அணைத்திருக்கும் கரங்களின் பிணைப்பு, எதனாலும் பிரிக்க முடியாத ஒன்று.

மனித வாழ்வின் துன்பங்களை நேர்மையுடன் எதிர்கொண்டு வெல்வதற்கு, ஒரு ஆணுக்கு தேவை எளிய பாசத்தின் தொடுதல்தான். இனி இந்த இரு உயிர்களின் வாழ்க்கை போராட்டம் எதையும் எதிர்கொள்ளும்! வெல்லும்! 

மேகத்திரளிலிருந்து வெளிவந்த கதிரவன், இவர்கள் நடக்கும் பாதைக்கு ஒளியை பாய்ச்சினான். 

முன்னே நடந்தபடி கண்ணன் முணுமுணுத்தான்.

"இனிமேல் நம் வாழ்க்கை முன்னே உள்ளது. திரும்பி பார்க்க வேண்டியதில்லை. அங்கே தெரியும் வெளிச்சத்தை நோக்கி நடப்போம். முன்னேறுவோம் மகனே! முன்னேறுவோம்..

முன்னே....முன்னே....

நிறைந்தது.
************************************
நன்றியுடன்
ரா. பாரத்ராம்
06/05/2020




Tuesday, May 5, 2020

அனாதையின் கரங்கள் - பாகம் 3

பாகம் 1


பாகம் 2



"கண்ணன் இல்லையா?"

"வெளியே போயிருக்கான். என்ன விஷயம்?"

"கடையில ஒரு ட்ரிப்பர் போயிடுச்சி. அதான், அந்த ட்ரிப்பர மேல தூக்கினாலும் கீழேயே இறங்கிடுது. அதுக்குதான் கண்ணன தேடி வந்தேன்,"

"கொஞ்ச நேரமாகுமே...வேற யாரையாவது அனுப்பட்டுமா?"

இல்ல. கண்ணன் வந்தவுடனே அனுப்ப்புங்க. ஏன்னா, அவனுக்குதான் நம்ம கடை வையரிங்க் நல்லா தெரியும்."

"சரி. அவன் வந்தவுடனே அனுப்பி வெக்குறேன்."

அந்த ஆள் சென்றவுடன் முதலாளி புன்னகைத்தார். எல்லோருக்கும் கண்ணன் தான் வேண்டும். அவன் கை வைத்தால் மறுமுறை கோளாறு வராது என்னும் அளவுக்கு அவன் மேல் நம்பிக்கை.

அது ஒரு சிறிதுமில்லாத, பெரிதுமில்லாத, நடுத்தரமான எலக்ட்ரிகல் கடை. விற்பனை மட்டுமில்லாமல் மின்சார பழுது பார்க்கும் ஆட்களையும் வேலைக்கு வைத்திருந்தார் அந்தக் கடை முதலாளி. ஆனால் கண்ணன் வந்த பின்பு வாடிக்கையாளர் எல்லோரின் மனதிலும் நல்ல பெயரை வாங்கிவிட்டான். அவனின் பொறுப்பான வேலையும், என்ன பழுது என்பதை எடுத்துரைக்கும் பணிவும் அவனுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது. 

சைக்கிளை மிதித்துக்கொண்டு கண்ணன் வந்தான்.

"கண்ணா, நம்ம தெரு முனை துணிக்கடை இருக்குல்ல. அதுல ட்ரிப்பர் ஸ்விட்ச் போயிடுச்சாம். புதுசு ஒண்ணு எடுத்துக்கிட்டு போய் அத மாட்டி விட்டுடு."

"சரி முதலாளி."

"இரு. சாப்பிட்டியா?"

"இல்லைங்க"

"அப்போ சாப்பிட்டிட்டு போ. ஒண்ணும் அவசரமில்ல."

"பரவாயில்ல முதலாளி. சின்ன வேலைதானே. சட்டுன்னு முடிச்சிட்டு வந்துடுறேன்."

அவன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு பெருமூச்சை விட்டு, "பாவம்" என்று மட்டும் சொன்னார்.

கேசவனின் வாழ்க்கையில் மாற்றங்கள் அதிகம் நடந்துவிட்டன. தையற்கடையில் சேர்ந்து, வேலை நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவன், தனது கலகலப்பான பேச்சினால் வாடிக்கையாளர்களை கவர்ந்து விட்டான். பணம் சேர்த்துவிட்டு ஒரு சிறிய தனிக்கடையை திறந்துவிட்டான். அவனுடன் இன்னுமொரு தையற்காரர், ஒரு உதவியாளன் என்று சின்ன ஸ்தாபனத்தை நிறுவியவன், அதற்கு மேல் தாமதிக்காமல் திருமணமும் செய்துவிட்டான். அவனது திறமையால், அவன் படிப்படியாக முன்னேறுவிடுவான் என்பது உறுதியாகத் தெரிந்தது.

கண்ணன் எப்போதாவது கேசவனைப் பார்ப்பதோடு சரி. இருவருக்கும் வேலை அதிகம் என்பதால் அடிக்கடி சந்திப்பதில்லை. அதே சமயத்தில், கேசவனின் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக இருந்தவன் கண்ணனே. இருவருக்குமிடையே என்றும் தேயாத நட்பு இருந்தது. கால ஓட்டத்தில் கேசவனுக்கு இரு குழந்தைகளும் பிறந்துவிட்டனர்.

கண்ணன் தன்னைப் போன்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்த இரு பிரம்மச்சாரி வாலிபர்களுடன் சேர்ந்து ஓர் அறையை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தான். வீண்செலவுகள் எதுவும் செய்வதில்லை என்றாலும், பணத்தை அதிகம் சம்பாதிப்பதை அவன் விரும்பவில்லை. வேலைக்கேற்ற ஊதியம் என்பதே அவன் விருப்பம். 

வேலையை முடித்துவிட்டு, நம்முடைய மூச்சு அடைத்துப் போகுமளவிற்கு ஊதியம் கேட்பவர்களை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டுவிட்டாலோ, 'நான் உன் உயிரை காப்பாற்றியிருக்கிறேன்' என்பதில் தொடங்கி, இந்திய அரசியலையும், உலக அரசியலையும் அலசி, கடைசியில் அவர்களின் கடை முதலாளியைத் திட்டுவதில் முடிப்பார்கள். நம் நிலையோ பரிதாபம். வேலைக்கான பணம் அதிகம் என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நமக்கு உடன்பாடு இருக்குமென்பதால் வேறு வழியின்றி கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவோம்.

கண்ணன் எந்த சமயத்திலும் அவ்வாறு செய்ததில்லை. அதனால் அவன் கேட்கும் பணத்தை எவ்வித எதிர் கேள்வியுமில்லாமல் கொடுக்கலாம். இப்படி இருப்பவனிடம் எப்படி பணம் சேரும்?

ஒரு ஞாயிற்றுக்கிழமை கேசவன் கண்ணனைப் பார்க்க வந்தான்.

"கண்ணா, எப்படிடா இருக்க?

"வாடா வா. நல்லா இருக்கேன். என் தங்கச்சி நல்லாயிருக்கா?"

"நல்லாயிருக்கா. ஏண்டா, ஒரு செல்ஃபோன் வாங்க மாட்டியா?"

"இருக்குடா. ஆனா, அது முதலாளி கொடுத்திருக்காரு. வேல விஷயமா மட்டும்தான் பேசணும்." 

"உன்ன திருத்தவே முடியாது. விடு. இப்போ நானொரு முக்கியமான விஷயமா வந்திருக்கேன்."

"என்ன, சொல்லுடா?"

"நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?"

கண்ணன் வாய் விட்டு சிரித்தான். "கேசவா, நீயே இப்படி பேசலாமா? இது ஒண்ணுதான் எனக்கு குறைச்சல்!"

"கண்ணா, இப்படி சொல்லலாமா? நமக்குன்னு யாரு இருக்கா? உன்ன கவனிச்சுக்க ஒருத்தர் வேண்டாமா? நான் உனக்கு கெடுதலா சொல்வேன்?"

"அப்படி இல்லடா. கல்யாணம் செஞ்சுகிட்டா ரெண்டு பேருக்கு சம்பாதிக்கணும். மட்டுமில்லாம, என் கிட்ட இருக்குறது ஏழ்மையும், தனிமையும்தான். இத பங்கு போட்டுக்க யாரு வருவாங்க?"

"சம்பாதிக்கிறது என்னடா பெரிய விஷயம். நாம என்ன பணத்தோடவா வளர்ந்தோம்! இதோ பாரு. என் வீட்டுக்காரி அவளுக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு பத்தி நேத்துதான் சொன்னா. நல்ல பொண்ணாம். கிட்டத்தட்ட நம்மள மாதிரிதான். அம்மா இல்ல. அப்பாவும் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி போயி சேர்ந்துட்டாரு. பனிரெண்டாவது வர படிச்சிருக்காம். பணம் காசு எல்லாம் ஒண்ணும் கிடையாது. ஆனா தங்கமான மனசு. ம்... அப்படி இருக்குறவங்களுக்குதானே இப்படியெல்லாம் நடக்கும். சரி. உனக்கேத்த நல்ல பொண்ணு. நான் உனக்கு தப்பா கொண்டுவருவேனா?"

கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.

"கல்யாணம் பண்ணிக்கிட்டா தனி வீடு பாக்கணும். வாடகை செலவு அதிகமாகும். ரெண்டு வயிறுக்கு சம்பாதிக்கணும். குழந்த குட்டின்னு வந்துட்டா, செலவு இன்னமும் அதிகமாகும்." (குழந்தை என்ற வார்த்தையை சொல்லும்போது கண்ணனின் இதயத்தில் ஒரு சிறு நடுக்கம் உன்டாயிற்று. அது இன்பமா அல்லது நடுக்கமா என்பது புரியவில்லை).

"அதெல்லாம் பார்த்துக்கலாம். வயசு போயிடுச்சுன்னா திரும்ப வருமா? இந்தப் பொண்ணும் உனக்கு ஏத்த மாதிரி இருக்கு. பொண்ண வந்து பாரு. நல்லதாகவே நடக்கும்."

அந்தப் பேச்சு வரும்வரை கண்ணன் திருமணத்தைப் பற்றி நினைத்ததேயில்லை. கேசவனைத் தவிர, இந்த உலகில் யார் இதை சொல்லியிருந்தாலும் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் 'இல்லை' என்று கண்ணன் சொல்லியிருப்பான். 

"அடுத்த ஞாயிற்றுக்கிழமை போய் பார்த்துடலாமா?"

கண்ணன் சரியென்று தலையாட்டினான்.

ஞாயிறும் வந்தது. கேசவன் இரு சக்கரவாகனத்தில் வந்து கண்ணனை அழைத்துச் சென்றான். அவன் மனைவி முன்னமே பேருந்தில் சென்று விட்டாள். நாத்தனார் பொறுப்பல்லவா! பெண்ணுடன் பேசிப்பழகி, உளவுத்துறை போல், பெண்களுக்கே உரித்தான மனதில் இருப்பதை முகத்தை வைத்தே தெரிந்து கொள்ளும் ஆற்றலால், சில இரகசியங்களை தெரிந்து கொள்ள.

கண்ணனும் வந்து பெண்ணை பார்த்தான். இரகசியங்கள் எதுவும் தேவைப்படவில்லை. அந்தப் பெண் ஏழ்மையிலும், சோகத்திலும் அடிபட்டு, புதுவித தேவதையாக கண்ணனின் கண்களுக்குத் தெரிந்தாள்.

அப்புறமென்ன! ஒரே ஒரு அறையைக் கொண்ட சிறு குடித்தனத்தை கண்ணன் தேடி பிடித்துவிட்டான். கண்ணன் முதலாளி முன்னிலையில், கேசவனும், அவன் மனைவியும் உறவு சான்றாக நிற்க, கோயிலில் கண்ணன் கல்யாணியின் கழுத்தில் மாலையிட்டான். அருகிலிருந்த உணவகத்தில், அனைவருக்கும் கண்ணனின் முதலாளி மதிய உணவு விருந்தளித்தார். ஒரு ஏழையின் திருமணம் இவ்வாறு இனிதே நடந்து முடிந்தது.

குடும்பம் தொடங்குவதற்குத் தேவையான பொருட்களை, கேசவன் தங்கையின் சீதனமாக கொடுத்து விட்டான். 

மனைவி வந்தபின் வாழ்க்கை மாறிப் போனது. கல்யாணி கணவன் மீது வைத்திருந்த அளவில்லாத அன்பினால் இருவரது வாழ்விலும் இன்பத்தின் சாயல் படறத் தொடங்கியது. இருவருமே துன்பத்தை மட்டுமே தாங்கியவர்கள் என்பதால் இன்பத்தின் உண்மையான சுவை நம்மை விட அவர்களால் நன்கு உணரமுடியும்.

முதலாளி கண்ணனின் சம்பளத்தை சற்று உயர்த்திக் கொடுத்தாரென்றாலும், கண்ணன் முன்பைவிட அதிகமாக உழைக்க ஆரம்பித்தான். அவனுடைய அடிப்படை குணத்தில் எந்த மாற்றமும் இல்லையென்பதால், ஏமாற்றிப் பிழைப்பது அறியாமல், அதிகமாக உழைத்து பணம் சேர்க்க ஆரம்பித்தான்.

ஒரு நாள் கண்ணன் அப்பாவாகப் போகிறான் என்பதை கல்யாணி அவனிடம் கூச்சத்துடன் சொன்னாள். இந்த செய்தி கண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததென்றாலும், கல்யாணியிடம்,

"ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கும்னு நான் கனவு கூட கண்டதில்ல."

மனைவியின் தலை குனிந்து வெட்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தவன், "அதே சமயம்...கொஞ்சம் கவலையாகவும் இருக்கு."

"எதுக்குங்க கவலப்படுறீங்க?"

"குழந்தைன்னா...அத நல்லா பாத்துக்கணும். படிக்க வைக்கணும்...நான் பட்ட கஷ்டமில்லாம அந்தக் குழந்தைய வளர்க்கணும்..."

"கவலப்படாதீங்க. நாம வாழ்க்கையில் பார்த்த, அனுபவித்த துன்பங்களை நம்ம குழந்தைகளுக்கு வராம செய்றதுதானே அப்பா அம்மா கடமை. நீங்க எங்கள நல்லா பார்த்துப்பீங்க."

இந்த அன்பு வார்த்தைகள் கண்ணனுக்கு மன அமைதியைத் தந்தது. 

துன்பமறிந்த மனைவி துணையிருக்கையில் ஒரு மனிதன் என்னதான் செய்ய இயலாது!

தன்னாலியன்றவரை மனைவிக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தான். அந்த தெருவில் ஒரு வயதான அம்மா இருந்தார்கள். கண்ணன் வேலைக்குச் சென்ற பின் அவர்கள் வந்து கல்யாணியுடன் இருந்தார்கள். ஏழைக்கு ஏழைதானே துணையாக இருக்க முடியும்! 

கண்ணன் ஒரு நாள் கடைக்கு சென்றபோது முதலாளி அவர்கள்,

"கண்ணா, வா..வா.. மூணாவது தெருவிலிருக்கிற மளிகைக் கடைக்காரர் வந்திருந்தார். அவர் ஒரு மாசம் ஊருக்கு போறாராம். அந்த சமயத்துல, அவர் வீட்டுக்குள்ள இருக்குற மொத்த வையரிங்க மாத்தணுமாம்! வீடு கட்டி நாப்பது வருஷமாச்சாம். பொருள், கூலி எல்லாம் சேர்த்து ரெண்டு லட்சம் ஆகும்னு சொல்லிட்டேன். எல்லாத்துக்கும் சரின்னு சொன்னவர், நீதான் அந்த வேலையை செய்யணும்னு கண்டிப்பா சொல்லிட்டாரு."

"அதனாலென்ன முதலாளி. நல்ல காண்ட்ராக்ட். நல்லபடியா செஞ்சுடுவோம்."

"சரிப்பா. அவர் நாளைக்கு ஊருக்கு போறாரு. நாளைக்கே ஆரம்பிச்சிடலாம்."

அன்று மாலையில் கண்ணன் மனைவியிடம் அந்தத் தகவலை தெரிவித்தான். "நீ வந்த அதிர்ஷ்டம். பெரிய வேலைதான். முதலாளி கண்டிப்பா எனக்கு ஒரு தொகை கொடுப்பாரு."

மகிழ்ச்சியால் கல்யாணியின் முகம் மலர்ந்தது. அவளுக்கு ஏழு மாதம் முடிந்திருந்தது. "என் அதிர்ஷ்டம்னு சொல்றீங்க? நம்ம பிள்ளையோட அதிர்ஷ்டம்னு சொல்லுங்க."

இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

அடுத்த நாள் முதல் கண்ணன் அந்த வேலையை தொடங்கினான். புதிதாக செய்வதென்றால் சுலபம், ஏற்கனவே இருக்கும் பழைய வையரை எடுத்துவிட்டு, புதிதாக வையரை எல்லா பாய்ன்ட்டுக்கும் இழுப்பது கடினம். ஆனால் நமது கண்ணன் திறமைசாலியாற்றே! சட்டு சட்டென்று இழுத்து போட்டு விட்டு மாற்ற ஆரம்பித்தான்.

அவனுக்கு உதவியாக மணி என்னும் சிறிய பையன். வேலை அவ்வளவாகத் தெரியாது என்றாலும் சுட்டிப்பயல். சொல்வதை பொருத்தமாக செய்வான்.

கல்யாணி அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்தாள். எல்லாம் நல்லபடியாக இருப்பதாக பெண் மருத்துவரும் சொல்லிவிட்டார்.

90 சதவிகித வேலையும் முடிந்துவிட்டது. இனிமேல் எல்லாம் ஒழுங்காக பொருத்தப்பட்டிருக்கின்றதா என்பதை சரி பார்க்கும் வேலையும் தொடங்கியாகிவிட்டது. 

கண்ணன் மெயின் சுவிட்ச்சுகளை இணைக்கத் தொடங்கினான். எல்லாமே புதிசு. பழையவற்றை எல்லாம் தூக்கி எறிந்தாகிவிட்டது.

"மணி, மெயின் இணைப்பு கொடுடா."

"கொடுத்துட்டண்ணா."

"நான் சொல்லும்போது அணைச்சிடு."

ஒரு வயர் மட்டும் சிக்கிக் கொண்டது. அதை கண்ணன் இழுக்க முயன்றபோது, முக்காலியிலிருந்து கால் நழுவியது. கீழே விழாமலிருக்கும்பொருட்டு எதையாவது பிடிக்க அலைந்த கைகள் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த வயரைப் பிடித்தன. 

உடலினுள்ளே பாய்ந்த தாள முடியாத வலியினால், மணி என்று கத்த முயன்ற வாயிலிருந்து ம்ம்ம்மாமா...என்ற அலறல்தான் கேட்டது.

கீழே விழுந்த கண்ணனின் உடல் முதலில் சிறிதாக நடுங்கி பின் உடல் முழுவதும் உதறத் தொடங்கியது. இரு கைகளும், கால்களும் உதறி உதறி துடித்தன. 

கண்ணனின் வாயிலிருந்து நுரை கக்க தொடங்கிற்று. மயக்கத்தில் வீழ்ந்தது கண்ணனின் உடல்.

எப்படியோ தகவல் கல்யாணிக்கு போனது. 'கண்ணன் இறந்து விட்டான்' என்று யாரோ ஒருவர் பிதற்ற, "ஐயோ" என்று அலறிய கல்யாணிக்கு அதிர்ச்சியில் பிரசவ வலி தொடங்கியது. பனிக்குடம் உடைந்தது என்பதை அறிந்தவுடன் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு மயக்க நிலையிலேயே தூக்கி செல்லப்பட்டாள்.

**************************************

இதுதானே வாழ்க்கை! மன நிம்மதி என்று நினக்கும் வேளையில், ஆன்மாவைத் துளைத்தெடுக்கும் அடுத்த துன்பத்தை கொடுக்கும் விளையாட்டு என்றுதான் இந்த மனித வாழ்வில் நிற்கப் போகிறது?

உயிருடன் பிழைத்த கண்ணனுக்கு கிடைத்தெல்லாம் வலிப்பு நோயும், உயிரற்று கிடந்த கல்யாணியின் உடலும், சிவந்த சின்னஞ்சிறு கைகளையும், கால்களையும் உதைத்து வாழ்வின் முதல் அழுகையை தொடங்கிய குழந்தையும் தான்.

எந்த மருத்துவமனையிலும் கண்களில் நீர் திரள ஒரு ஆண் மகன் நிற்பதைப் பார்த்தால் அவன் அவனுக்குரிய அன்பை இழந்து விட்டானென்று அர்த்தம். கீழே விழுந்து கதறக் கூட அவனால் முடியாது. ஆணின் தலைவிதி அது.

உலகை மறந்து, வாழ்வை மறந்து, தன்னிலை மறந்து, கைக்குழந்தையை சுமந்து கொண்டு அந்த ஆண் நின்றிருந்தான். 

இனி அவன் இழக்க என்ன இருக்கின்றது - ஒன்றே ஒன்றைத் தவிர!

விரைவில்:
முடிவு பாகம்: "வாழ்வின் கடைசி தோல்வி."

************************************
நன்றியுடன்,
பாரத்ராம் ராஜாங்கம்.
05/05/2020







Sunday, May 3, 2020

அனாதையின் கரங்கள் - பாகம் 2

https://neerathi.blogspot.com/2020/05/1.html?m=1பாகம் 1


அன்று மாலையே தாத்தா பழையபடி உற்சாகமாக காணப்பட்டது பிள்ளைகளுக்கு பெரும் மன நிம்மதியாக இருந்தது. 

"கண்ணா, தாத்தாவ பாருடா."

கண்ணன் புன்னகை செய்தபடியே வேலை செய்து கொண்டிருந்தவரிடம் ஓடினான்.

"வாடா, என் செல்லமே! எங்க அந்த வாலு?"

வால் பின்னாலேயே வந்தது. "கொஞ்ச நேரம் இருங்கடா...ஓ..ஓ...பெரிய மனுஷனுங்கள வாடா, போடானு சொல்லலாமா? வாங்க சாருங்களா."

தாத்தாவை உற்சாகத்துடன் பார்த்தவுடனேயே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டது. இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

"இருங்கடா, என் தங்கங்களா...உங்களுக்கு இந்தக் கிழவன் என்ன கொண்டு வந்திருக்கான் பாருங்க."

பையிலிருந்து ஆளுக்கொரு கொய்யாப் பழத்தைக் கொடுத்தார். சிறு அணிற் குட்டிகளைப் போல் இருவரும் பழத்தைக் கொறித்தனர். சுவையோ சுவை. அது போன்ற கொய்யாப் பழத்தை கண்ணன் சாப்பிட்டதேயில்லை. 

கிழவர் சொன்னார். "நல்லா இருக்கா? இதுதாண்டா, உழைப்புக்கேற்ற பலன். நான் வெச்ச மரம், தினம் தினம் பாத்து பாத்து, என் பிள்ளைய போல வளர்த்தது. உங்களுக்கு இந்த தாத்தா சொல்ற ஒரே அறிவுரை என்ன தெரியுமா...உங்க உழைப்புக்கேற்ற பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அதனால, எதையும் நம்புறதுக்கு முன்னாடி உங்க உழைப்ப நம்புங்க. நல்லபடியா வருவீங்க. போங்கடா. போய் விளையாடுங்க."  

பள்ளிக்கு செல்லும் காலம் நெருங்கியது. தையற்காரர் அளவு எடுத்து விட்டு சென்றார். இரு நாட்களுக்குப் பிறகு புதுத் துணியும் வந்தாயிற்று. விடுதியிலிருந்து தினமும் வெளியே செல்லும் வாய்ப்பை எண்ணி கேசவனுக்கு ஒரே உற்சாகம். இன்னமும் பல நண்பர்களை சந்திக்கலாமே!

நல்ல நாளும் வந்தது. இரு குழந்தைகளும் புறப்பட்டன. துணைக்கு ஒரு ஆயா மட்டும் வந்தார். செய்ய வேண்டிய மற்ற 'சடங்குகள்', அதாவது விண்ணப்பம், தயாரிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ், புகைப்படம் எல்லாம் முன்னமே கொடுத்தாகிவிட்டது. அப்பாவா, அம்மாவா? இதிலெல்லாம் குழப்பங்கள் வர! விடுதியில் கொடுப்பதுதான் விவரங்கள்.

நடந்து சென்றது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பள்ளியை நெருங்கும்போது கண்ணனுக்கு மனதில் என்னவென்று தெரியாத ஏதோ புது கலக்கம். பாதுகாப்பாக இருந்த இடத்தை விட்டு புது இடத்திற்கு செல்லும் பயம்.

பத்து அல்லது பதினைந்து நிமிட நடைதான். ஆயா சொன்னார். "அதோ பாருங்க. அதுதான் நீங்க படிக்கப்போற பள்ளி."

கண்ணன் பார்த்தான். கண்முன்னே ஒரு வறட்டுத் திடல் தெரிந்தது. ஆங்காங்கே சில மரங்களும் நடுநாயகமாக ஒரு குழாயும் காணப்பட்டது இதற்கு பின்னால், ஓடுகள் வேயப்பட்ட, மூன்று வீடுகளைப் போல் தெரிந்த, பழைய கட்டிடங்கள் இருந்தன. கட்டிடங்களின் சுவர்கள் இரண்டு அல்லது மூன்று அடிதான் இருக்கும். மற்றபடி திறந்த இடைவெளிதான். வெயில் உள்ளே விழாது என்றாலும் வெப்பமும், வறண்ட புழுதியும் தாராளமாக, இந்தப் பக்கம் நுழைந்து அடுத்த பக்கம் செல்லலாம். காற்றோட்டத்திற்காக விடப்பட்ட இடைவெளியா அல்லது செங்கல் வாங்க பணம் இல்லாத குறையால் விடப்பட்ட இடைவெளியா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

சுருங்கக் கூறின், மரத்தடி கற்றலிலிருந்து முன்னேற்றப்பட்ட அடுத்த படி. 

கிராமத்துப் பள்ளிக்கு இது போதாதா? அதுவும் கிராமத்துக் குழந்தைகளுக்கு அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், கருணையுள்ளத்தால் நடத்தப்படும், பள்ளியில் வேறென்ன எதிபார்க்கிறீர்?

கண்ணனுக்கும், கேசவனுக்கும் இதில் எந்தக் குறையுமில்லை. அவர்களின் வாழ்க்கை முறைக்கு இதொன்றும் வினோதமில்லையே!

ஆயா ஒரு வகுப்பறைக்கு அழைத்துச் சென்று இவர்களை வெளியே நிற்க சொல்லிவிட்டு உள்ளே இருந்த ஆசிரியையிடம் பேசிவிட்டு திரும்பி வந்தார். 

"பசங்களா, டீச்சர் கிட்ட நான் எல்லாம் பேசிட்டேன். நல்ல பிள்ளைங்களா இருக்கணும், தெரியுதா! ஒழுங்கா படிக்கணும். அப்புறம்...அதோ அங்க பாருங்க. அந்த சின்ன கட்டிடம் தெரியுதா?"

தூரத்திலிருந்து பார்த்தால் பாம்பு புற்று போலிருந்தாலும், வெயிலுக்கு கண்ணை சற்று சுறுக்கிப் பார்த்தால் அது தெரிந்தது.

ஆயா சொன்னார். "மதிய மணி அடிச்சவுடனே எல்லாரும் அங்க போகணும். தட்டு எடுத்துக்கோங்க. சாப்பாடு போடுவாங்க. சாப்பிட்டிட்டு, தட்ட கழுவி வெச்சுடணும், தெரியுதா? டீச்சர் அப்புறம் ஐயாகிட்ட ஏதாவது சொல்லிட்டாங்கன்னா எங்களுக்கு திட்டு விழும்."

இதில் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பழக்கப்பட்டதுதானே!

"சாயங்காலம் நீங்களே வந்துடுவீங்கள்ள?"

கண்ணனும், கேசவனும் தலையாட்டினார்கள்.

ஆயா சென்று விட்டார். இரு குழந்தைகளும் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

கண்ணனின் பள்ளிப் பருவத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக (அல்லது சொல்ல முடியாத அளவிற்கு) ஒன்றும் நடந்துவிடவில்லை. நினைத்தது போலவே கேசவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துவிட்டனர். நேரம் கிடைத்துவிட்டால் ஒரே ஓட்டமும், விளையாட்டும்தான். 

கண்ணன் பொதுவாக தனித்தே இருந்தான். ஆனால் மற்ற குழந்தைகள் அவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. அவனின் அழகான, உள்ளுக்குள் சோகம் நிறைந்த புன்னகை அவனின் நல்ல குணத்தை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததால், அவனை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதே போல், எவ்வளவு நண்பர்கள் இருந்தாலும் கேசவன் கண்ணன் மீது வைத்திருக்கும் நட்பு தனித்துவமானது. அந்த நட்பு எதன் அடிப்படையில் தோன்றியது என்பது விளங்கிவிட்டால், அந்நட்பு ஏன் தோற்காது என்பது புரிந்துவிடும்.

முதற் மதிப்பெண் எடுக்காவிட்டாலும், இரு குழந்தைகளும் படிக்க வேண்டியதை படித்துவிடுவர். கண்ணன் பொதுவாகவே பொறுப்பு குணமுடையவன். கேசவன் எவ்வளவுதான் விளையாட்டுச் சிறுவனாக இருந்தாலும் கண்ணனின் உதவியால் படித்து விடுவான்.

அதே நேரத்தில், உங்களிடம் நான் மறைக்க விரும்பினாலும், என் மனசாட்சி ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இன்னொரு காரணத்தையும் சொல்லிவிடுகிறேன்.

மதியம் பள்ளியில் வெந்து, கொதிக்கும் சாம்பார் சோறு, விடுதிக்கு சென்றால் அங்கும் உணவு - பள்ளியில், படிப்பில் சரியாக இல்லாவிடின் எங்கே இந்த உணவுக்கு கேடு வந்துவிடுமோ என்பது மற்றொரு முக்கிய காரணம்.

இதை நான் ஏன் மறைக்க விரும்பினேன் என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். நீங்கள் என்னை தவறாக நினத்துவிடக்கூடாது அல்லவா!

இப்போதெல்லாம் பெரிய ஞானிகளும், விஞ்ஞானிகளும் மனதை அடக்க வேண்டும், தியானம் செய்ய வேண்டும், அப்படி செய்தால் நோய் வராது என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மைதான்! ஆனால் எந்த தியானத்திற்கும் அடங்காத உறுப்பு ஒன்று நம்மிடம் உள்ளது. ஐயகோ! அது குரலெழுப்பத் தொடங்கினாலோ மொத்த உடலும் கூட்டு சேர்ந்துவிடும். உங்களுக்கே புரிந்திருக்கும். அந்த உறுப்பு வயிறு, அதன் போராட்ட ஆயுதம் பசி. கொழுப்பை சேர்த்து வைத்திருக்கும் நமக்கே அப்படியென்றால், பாவம், சின்ன குழந்தைகள் அதற்கு பயப்படுவதில் தவறில்லையே. மூளைக்காகவில்லை, வயிற்றுக்காகத்தான் படித்தேன் என்று சொல்வதில் என்ன அவமானம் வந்து விடப்போகிறது?

ஒரே ஒரு நாள் மட்டும் கண்ணனின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகிவிட்டது. பள்ளியில் அன்று இன்ஸ்பெக்க்ஷன் என்றார்கள். ஏதோ ஒரு உயர் கல்வியதிகாரி பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுக்கு தரப்படும் பணத்திற்கு வேலை செய்கிறார்களா, அதே போல் வயிற்றுக்குப் போடப்படும் உணவிற்கேற்ப மாணவர்கள் படிக்கிறார்களா என்பதை சோதிப்பாராம். 

அப்போது கண்ணன் மூன்றோ அல்லது நான்கோ வகுப்பிலிருந்தான். உயர் அதிகாரி வருகையில் ஆசிரியையின் பதற்றத்தைப் பார்த்து கண்ணனுக்கு பயம் வந்துவிட்டது. ஆசிரியர்கள் ஒழுங்காக சொல்லிக் கொடுத்தால் ஏன் உயர் அதிகாரி வர வேண்டும் அல்லது உயர் அதிகாரி வருவார் என்று தெரிந்திருந்தும் ஆசிரியர்கள் ஏன் ஒழுங்காக பாடம் சொல்லித் தருவதில்லை என்று குழந்தைகளால் யோசிக்க முடியுமா?

கண்ணனுக்கு அன்று காலையிலிருந்தே பதட்டமாக இருந்தது. பள்ளிக்கு நடந்து போகும்போது கண்ணன்,

"கேசவா, எனக்கு இன்னிக்கு என்னமோ பயமா இருக்குடா?"

"எதுக்கு?"

"தெரியல...யாரோ ஆபிசர் வராராமே."

"நமக்கு என்ன? டீச்சரம்மா பயப்படுராங்க. அப்படியே நம்மள கேள்வி கேட்டு பதில் தெரியலன்னா, தெரியலன்னு சொல்லிவிடுவோம். ஆனா அப்படியெல்லாம் நடக்காது. நாமதான் படிச்சிருக்கோமே"

அவன் சொல்வது உண்மை. ஆனாலும் கண்ணனுக்கு அந்த நெருடல் நிற்கவில்லை.

பரபரப்பாக இருந்தாலும் மாணவர்கள் சாதாரணமாக இருந்தது கண்ணனுக்கு ஆறுதலை தந்தது.

கடைசியில் அந்த அதிகாரி கண்ணன் படிக்கும் வகுப்பறைக்கு வந்தார். வந்தவர் கண்ணனிடமா முதலில் வர வேண்டும்!

உயர் கல்வியதிகாரியென்பதால் அந்த கிராமத்திற்கு சற்றும் பொருந்தாத ஆங்கிலத்தில் ஒரு கேள்வியை கேட்டார்.

அவர் கேட்டதென்னமோ எளிய கேள்வியான "உன்னுடைய அப்பாவின், அம்மாவின் பெயரைக் கூறு" என்பதுதான்.

கண்ணனுக்கு அந்தக் கேள்வி நன்றாக புரிந்தது. ஆனால் பதிலை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பது தெரியவில்லை. நான் அனாதை என்றோ, எனக்கு அப்பா அம்மா இல்லை என்பதையோ ஆங்கிலத்தில் எப்படி சொல்வது என்பது அந்த சிறுவனுக்குத் தெரியவில்லை.

கண்ணன் வாழ்வின் கொடுமையைக் கற்பது அந்நொடியில்தான் தொடங்கியது. மற்றவர்களுக்கு மிகவும் எளிய பதில் இந்த குழந்தைக்கு புரியப் போவதேயில்லை என்பது அந்த அதிகாரிக்கு எப்படித் தெரியும்?

கண்ணன் விம்மத் தொடங்கினான். இந்த விம்மல் அவன் மனதிலிருந்தல்ல, அவன் உடலிலிருந்துமல்ல, அவனது வாழ்க்கையின் தொடக்கதிலிருந்து உருவானது. அந்த விம்மலையும், தொடர்ந்து வந்த கண்ணீர் துளிகளின் வேதனையும் நம்மால் உணர முடியாது. அந்த சிறுவனின் வேதனை நமது கண்களுக்கானதல்ல, அந்தக் கொடிய வேதனை இறைவனின் கண்களுக்கு.
  
அதிகாரி பயந்துவிட்டார். "ஒண்ணுமில்லப்பா, உன் அப்பா அம்மா பெரு சொல்லுன்னுதான் கேட்டேன்."

பின் வரிசையிலிருந்த ஒரு சிறுவன் எழுந்து சொன்னான். "ஐயா, அவன் அனாதை. விடுதியிலிருந்து வந்தவன். அவனுக்கு அப்பா அம்மாவெல்லாம் தெரியாது."

அந்த அதிகாரிக்கு என்ன சொல்வது, செய்வது ஒன்றுமே தெரியவில்லை. "ஆழாத, அழாதப்பா..நாம யாருமே அனாதையில்ல..." என்பது போன்ற அபத்தமான வார்த்தைகளை முணுமுணுத்துவிட்டு சென்று விட்டார்.

ஆசிரியர் கண்ணனை மரத்தடிக்கு போய் விளையாடி என்று சொல்லிவிட்டு கேசவனையும் கூட அனுப்பினார். இருவரும் வெளியே சென்று மரத்தடியில் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். கேசவனுக்கும் அதே கேள்விக்கு என்ன பதிலிருக்கிறது?

மாலையில் திரும்பி வரும்போது கண்ணன், "கேசவா, தாத்தாகிட்ட போய் எல்லாத்தையும் சொல்லி அழணும் போல இருக்குடா."

"சே...வேண்டாம்டா. பாவம். தாத்தா ரொம்ப வருத்தப்படுவாரு. விட்டுத்தள்ளு. நாளைக்கு லீவுதானே. நல்லா விளையாடினா எல்லாம் சரியாயிடும்." 

கண்ணனுக்கு அந்த மோசமான நாள் இன்னமும் முடியவில்லை. விடுதிக்கு சென்று, கை, கால் கழுவிவிட்டு தாத்தாவை பார்க்க சென்றான். தாத்தாவை எங்கும் காணோம். கடைசியில் சமையல் செய்துகொண்டிருந்த ஆயாவிடம் சென்று, "ஆலு ஆயா, தாத்தா எங்க?" என்று கேட்டான்.

"அதை ஏன்பா கேக்குற. இன்னிக்கு ஒரே ரகள. அவரு மகனுங்க வந்து அவர இழுத்திட்டு போயிட்டாங்க."

அருகிலிருந்த இன்னொருவள் பேசினாள். "என்னமோ சொத்துக்கு இவரு கோர்ட்டுக்கு வரணுமாமே."

"அதுக்கு? அந்தக் கிழம் இவ்ளோ நாளா மாடு மாதிரி வேலை செஞ்சுக்கிட்டுருந்ததே...அப்போ எங்க போனாங்க இவனுங்க?"

அதற்கு மேல் கண்ணன் அங்கு நிற்கவில்லை. அவன் படுக்கும் இடத்திற்கு அருகிலிருந்த ஜன்னலிடம் வந்தான். வெளியே தாத்தா நட்டு வைத்த செடிகளும், அவர் பாசம் வைத்திருந்த மரங்களும் சோகமாக இருந்தன. தாத்தாவை இன்மேல் பார்க்க முடியாது என்பது அவனுக்கு சொல்லொண்ணா வருத்தத்தை தந்தது.
*****************************

சிறுவர்கள் வளர்ந்தனர். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இருவருக்கும் அவரவர் எந்தத் தொழிலைப் பயில வேண்டும் என்பதில் தெளிவு வந்துவிட்டது. 

கேசவன் தையற்காரனாக வேண்டுமென்பதை முடிவு செய்துவிட்டான். 
"கண்ணா, புது புது டிசைனா, தைக்கிறதுக்கு எனக்கு ஆசை. ஏதாவது ஒரு இடத்தில், ப்ளாட்ஃபார்மா இருந்தா கூட பரவாயில்ல. கொஞ்சம் சம்பாதிச்சிட்டு பெரிய கடைங்கள்ள கூட வேல கேக்கலாம். ஏன், இன்னும் பணம் வந்துதுன்னா நானே ஒரு சின்ன கடைய போட்டிடுவேன். இதுதான் எனக்கு ஆசை."

கண்ணன் யோசித்தான். அவனிடம் பாசம் வைத்திருந்த ஒரு ஆசிரியர் சொல்லியிருந்தார். "கண்ணா, நீ பொறுப்பானவனா இருக்க. பொறுமைசாலியாகவும் இருக்குற. எனக்கு ஒரு எலெக்ட்ரிகல் கடை முதலாளிய தெரியும். நல்ல மனுஷன். நான் சொல்றேன். உன்ன கடையில சேத்துப்பார்."

"கேசவா, பத்தாவது முடிச்சவுடனே எலெக்ட்ரிகல் டிப்ளோமா முடிச்சிட்டு, எலெக்ட்ரீஷியனா போக போறேன். உன்ன மாதிரிதான். எப்படியாவது முன்னேறி ஒரு கடைய வெச்சுட்டேன்னா, நம்மள மாதிரி பசங்களுக்கு சொல்லிக் கொடுத்து வேல கொடுக்கலாம்."

பள்ளிக்காலத்தில் இவர்கள் நினைத்ததை செய்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஏனென்றால் இவர்கள் வெறும் வார்த்தைகளை நம்புகிறவர்களல்ல. வாழ்க்கையின் கடின பாடமான உழைப்பை பயின்றவர்கள்.

பாகம் 3 

******************************************
நன்றியுடன்,
ரா.பாரத்ராம்
03/05/2020