கொடிய வெயில் வேளை. நமக்கு நன்கு பழக்கமான இருவர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
1. "அண்ணே, இந்த கொரோனா, கொரோனான்னு சொல்றாங்களே...அப்படின்னா என்னன்னே?
2. அடேய், உன் அறிவுக்கு அது புரியாதுடா..
1. உங்களுக்கே புரியும் போது எனக்கு புரியாதா? சொல்லுங்கண்ணே..
2. என்னடா தொல்ல பண்ற..சரி, கேட்டுக்கோ. கொரோனா ஒரு மோசமான பூச்சிடா. கடிச்சுதுண்ணு வெச்சுக்கோ..பத்து நாளு படுக்கையுல படுத்து கிடக்கணும்.
1. ஐயோ..அப்போ சமூக இடைவெளி அப்படின்னு சொல்றாங்களே, அது என்ன?
2. அது ஒண்ணுமில்லடா. இப்போ மதத்துக்கு மதம், ஜாதிக்கு ஜாதி இடைவெளி விட்டு இருக்கோமில்ல, அந்த மாதிரி நமக்கு நடுவுலயும் இடைவெளி விடனுமாம். உனக்கு புரியும்படி சொல்லனும்னா...இப்போ நீ அந்த மரத்துகிட்ட போய் நின்னுக்கணும். அப்புறம்தான் நாம ரெண்டு பேரும் பேசிக்கலாம். ஏன்னா, உனக்கு கிருமி இருந்து எனக்கு பரவ கூடாது பாரு.
1. இன்னொரு கேள்வி அண்ணே.
2. அடேய், தொந்தரவு பண்ணாத. அப்புறம் எட்டி உதைச்சுடுவேன்.
1. ஒரே ஒரு கேள்வி அண்ணே..
2. கேளு
1. அந்த நீளமான பரீட்சையாமே..
2. நீளமான பரீட்சையா?
1. அது தெரியாதா. நீட்டு பரீட்சை.
2. அட, மண்ணாங்கட்டி, அது நீட் தேர்வு.
1. ஆங். அதுதான். அது மட்டும் எப்படி இப்போ நடத்த போறாங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் இடைவெளி இல்லாம? இப்போ கொரோனா பூச்சி கடிக்காதா?
பளார்..#* அறையும் சத்தம்..
2. அது எப்படிடா என்ன பாத்து இந்த கேள்விய கேட்ட? நான் என்ன டாக்டரா, இல்ல இதையெல்லாம் தெரிஞ்சவனா? எவன் கிட்ட என்ன கேக்கணும்னு இல்ல? ஏண்டா இப்படி உயிர வாங்கறீங்க? நீங்க எல்லாம் அப்படியே கடல்ல விழுந்து சாக வேண்டியதுதானே! கேக்குறான் பாரு கேள்விய...
**********************
நன்றியுடன்,
ரா. பாரத்ராம்
24/08/2020
No comments:
Post a Comment