முருகன்
– தாலாட்டு
தாலே லோ செல்வா தாலேலோ
தாலேலோ முருகா தாலேலோ
வடிவேலைக் கையிலே கொண்டு – திரு
விளையாடல் செய்கிறாய் நின்று
படியாத பேர்களை வென்று – நீ
பரவினாய் அன்பிலே இன்று (தாலேலோ)
பிஞ்சென்ற கால்களைக் கொண்டு – இந்தப்
பேதையின் மனதிலே நின்று
அஞ்சாதே என்று நீ சொன்னாய் – நான்
அதுகேட்டுப் பாடினேன் உன்னை (தாலேலோ)
பவளவாய் முத்தங்கள் வேண்டும் – நான்
பணிந்துன்னைப் பாராட்ட வேண்டும்
கவலைகள் நீ தீர்க்க வேண்டும் – என்
கைகளில் நீ ஆட வேண்டும் (தாலேலோ)
தமிழென்ற மழலையைத் தருவாய் – உன்
தளிர்க்கையால் என்னை நீ தொடுவாய்
அமிழ்தென்ற வடிவமே பெறுவாய் – என்
ஆசையிலே அனுதினம் வருவாய். (தாலேலோ)
No comments:
Post a Comment