Monday, June 29, 2015

கயிலை மலை வாழும் காருண்யனே

கயிலை மலை வாழும் காருண்யனே - யாவும்
கடந்ததொரு நிலையில் இருப்பவனே - ஈசா         (கயிலை)


பயிலும் ஊழித் தாண்டவம் ஆடும் உன்
பாதங்களில் வீழ்ந்து பணிந்திட அருள்வாய்          (கயிலை)


ஐம்புலன்கள் என்னும் யானைகள் அடங்க
அலைகின்ற உள்ளம் ஒர்வழி நிலைக்க
மெய்வடி வானஉன் பெயர்சொல்லித் துதிக்க
மேலான பேரின்பம் நான்காண அருள்வாய்          (கயிலை)


****************************


கவிஞர். மு. பாவாணன்.

திருட்டுப் பரம்பரை

திருட்டுப் பரம்பரை

 

சென்னையின் ஒரு சேரிப் பகுதி. மாநகரின் எந்தத் திசை என்று சொன்னால் வீண்வம்புகள் வருமென்பதால், ஏதோ ஒரு சேரி என்று முடித்துவிடலே உசிதம். அந்தச் சேரியிலேதான் ‘திருட்டு மாரி’ என்பவன் வசித்து வந்தான். அவன் குடும்பம் ஒன்றும் பெரியதல்ல: அவன், மனைவி, எட்டு வயது மகன், இரண்டு வயது பெண் குழந்தை.

‘திருட்டு மாரி’ என அவன் அழைக்கப்படுவதற்கு பல (பெயர்) காரணங்கள் அச்சேரியிலே சொல்லப்பட்டு வந்தன. ஆனால் எல்லா காரணங்களுக்கும் முதன்மையானது அவன் பரம்பரையே திருட்டுத் தொழிலை சிரமேற்கொண்டு செய்து வந்ததுதான்! ‘களவும் கற்று மற’ என்பது அவன் பரம்பரையை பொருத்தமட்டில் ‘களவு கற்று மறை’ எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது போலும்.

Sunday, June 28, 2015

தேனீக்களும், ஓநாய் பாட்டுக்காரனும்!


  
அது ஒரு அழகான காடு. மிருகங்களும், பறவைகளும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. காட்டிற்கு மகாராஜாவான சிங்கம் நல்ல முறையாக ஆண்டு வந்தது.