தாமரை ஜூன் 1969 மலர் 10 இதழ் 12
வெண்முகில்
முன்றானை காற்றில் பறக்க
கண்பயில்
அலைகடல் கருங்குழல் துவள
பண்ணாள்
நடமிடும் உலகப் பெண்ணே!
உன்மொழி
எம்மொழி? உரைப்பாய் எனக்கே!
தொல்லுயிர் அனைத்தும் அறிந்த நன்மொழி
சொல்லுயர் மாந்தர் பேசும் செம்மொழி
எல்லா மொழிகளும் இணைந்த தேன்மொழி
தொல்லை வரம்புகள் கடந்த பொன்மொழி
சீர்தரும்
வான்மழை வீணையை மீட்டி
நீர்வரும்
ஆறுகள் தாளம் முழக்கி
தீர்ந்திடா
நல்லிசை வெள்ளம் வழங்கும்
பார்எனும்
பெண்ணே! உன்மதம் எம்மதம்?
வழங்கிய மாதமெலாம் இற்று நொறுங்கி
எழுந்த புதுமதம் இயற்கையின் உயிர்மதம்
குழந்தைச் சிரிப்பிலும் அன்னை மகிழ்விலும்
எழுந்து கனிந்த இன்பப் பெருமிதம்
திங்களும்
கதிருமாய்க் கண்களைச் சிமிட்டி
பொங்கிடும்
ஒளியிருள் போர்வைகள் மாற்றி
அங்கம்
மயக்கிடும் அவனிப் பெண்ணே!
தங்கும்
நாடெது? தாய்நா டெதுவோ?
வரைந்த கோடுகள் கலைந்து மறைந்து
நிரம்பிய அறிவொடும் நேய நெஞ்சொடும்
கரையிலா மாந்தர் கலந்தநன் னாடு
உருவால் நிறத்தால் தெரிகிலா நாடு
உடலால்
நீரால் அழகால் மணத்தால்
அடங்கா
ஒலியால் உயிர்கள் வளர்க்கும்
இடமாய்ப்
பரந்த ஞாலப் பெண்ணே!
படிந்த
கொள்கை எதுஉன் நெஞ்சிலே?
தோன்றிய உயிர்க்கெலாம் துணைதரும் கொள்கை
ஈன்றசெல் வங்கள் பொதுவெனும் கொள்கை
ஊன்றிய வேற்றுமை வேரரும் கொள்கை
சான்றோர் மூடர் நிலவாக் கொள்கை
Nice imagimation!
ReplyDeleteVara
Thanks Vara..It was written by my father!
ReplyDelete